சென்னை: நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை மற்றும் வெள்ளம் பாதிப்பு அதிகம் இருப்பதால் இங்கு ஆம்னி பஸ்கள் இன்று இயக்கப்படாது என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
24 மணி நேரத்திற்கும் மேலாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்ததால் இங்கு பெரும்பாலான நகரங்கள் நீரில் மிதக்கின்றன. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி, நெல்லை நகரங்கள் நீரில் மிதிக்கின்றன. காயல்பட்டினம் நீரில் மிதக்கிறது. தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை முதல் இப்போது வரை விடாமல் மழை பெய்து வருகிறது.

இதேபோல தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அதீத வெள்ள பாதிப்பை சந்தித்த நெல்லை, குமரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு இன்று ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக அதன் இணையதளத்தில் ஒரு அறிவிப்பை அது வெளியிட்டுள்ளது.
அதில், பத்திரிகைகளில் உலா வருவது போல எந்த முடிவையும் இதுவரை நாங்கள் எடுக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை எங்களது சேவையில் 80 சதவீத சேவை தொடர்கிறது. இன்றும் வழக்கம் போல எங்களது சேவைகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இரு வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதால் மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போது மேற்கண்ட மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பாத காரணத்தால் பஸ்களை இயல்பான முறையில் இயக்க முடியுமா என்று தெரியவில்லை. ஏற்கனவே சில ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது நினைவிருக்கலாம். அரசு பஸ்களும் கூட சூழலுக்கேற்பவே இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எனவே அதேபோலவே ஆம்னி பஸ்களும் இயக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. பொதுமக்களும் சூழலுக்கேற்ப தங்களது பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்வது நல்லது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}