நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு.. ஆம்னி பஸ்கள் ஓடுமா.. இரு வேறு தகவல்களால்  குழப்பம்!

Dec 18, 2023,10:20 AM IST

சென்னை: நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை மற்றும் வெள்ளம் பாதிப்பு அதிகம் இருப்பதால் இங்கு ஆம்னி பஸ்கள் இன்று இயக்கப்படாது என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


24 மணி நேரத்திற்கும் மேலாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்ததால் இங்கு பெரும்பாலான நகரங்கள் நீரில் மிதக்கின்றன. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 


தூத்துக்குடி, நெல்லை நகரங்கள் நீரில் மிதிக்கின்றன. காயல்பட்டினம் நீரில் மிதக்கிறது. தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை முதல் இப்போது வரை விடாமல் மழை பெய்து வருகிறது.




இதேபோல தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அதீத வெள்ள பாதிப்பை சந்தித்த நெல்லை, குமரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு இன்று ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக அதன் இணையதளத்தில் ஒரு அறிவிப்பை அது வெளியிட்டுள்ளது.


அதில், பத்திரிகைகளில் உலா வருவது போல எந்த முடிவையும் இதுவரை நாங்கள் எடுக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை எங்களது சேவையில் 80 சதவீத சேவை தொடர்கிறது. இன்றும் வழக்கம் போல எங்களது சேவைகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இரு வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதால் மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


இருப்பினும் தற்போது மேற்கண்ட மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பாத காரணத்தால் பஸ்களை இயல்பான முறையில் இயக்க முடியுமா என்று தெரியவில்லை.  ஏற்கனவே சில ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது நினைவிருக்கலாம். அரசு பஸ்களும் கூட சூழலுக்கேற்பவே இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எனவே அதேபோலவே ஆம்னி பஸ்களும் இயக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. பொதுமக்களும் சூழலுக்கேற்ப தங்களது பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்வது நல்லது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்