புதிய நாடாளுமன்றத்தை சுற்றிப் பார்க்க வந்த தமன்னா!

Sep 21, 2023,05:36 PM IST
புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பார்வையிட இன்றும் நடிகைகள் பலர் வந்திருந்தனர். தமன்னா, குஷ்பு உள்ளிட்டோர் அவர்களில் அடக்கம்.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் தற்போது செயல்பாட்டுக்கு வந்து விட்டது. இந்த நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே அங்கு "சந்திரமுகி" கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல்வேறு நடிகைகள் சிறப்புப் பார்வையாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.



இந்த நிலையில் இன்று 2வது நாளாக மேலும் பல நடிகைகள் வந்திருந்தனர். நம்ம ஊர் குஷ்பு, "ஜெயிலர்" தமன்னா உள்ளிட்டோர் வந்திருந்தனர். சிவப்பு நிற சேலையில் பளிச்சென காணப்பட்டார் தமன்னா.  புதிய நாடாளுமன்றத்தை சுற்றிப் பார்த்து விட்டு வந்த தமன்னா செய்தியாளர்களிடம் பேசுகையில், "மகளிருக்கான இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா சாமானிய மக்களை அரசியலில் ஈடுபட ஊக்குவிக்கும்" என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை இதுவரை புதிய நாடாளுமன்றத்திற்கு அரசு அழைக்கவில்லை. அதற்குப் பதில் துறவிகள், சாமியார்கள், மடாதிபதிகள், நடிகைகளை அழைப்பதா என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்