கருவைச் சுமக்கும் பெண்கள் இனி.. கருவறைக்குள்ளும் நுழைவார்கள்.. மு.க.ஸ்டாலின்

Sep 14, 2023,02:03 PM IST
சென்னை:  கருவைச் சுமக்கும் பெண்கள் நுழைய முடியாத இடமாக கோவில் கருவறைகள் இருந்தன. இனி வரும் நாட்களில் கோவில் கருவறைக்குள்ளும் பெண்கள் நுழைவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற புரட்சித் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தை உச்சநீதிமன்றம் செல்லுபடியாகும் என்று அதிரடியாக தீர்ப்பளித்து விட்டது. இந்த நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்து தேறியவர்களுக்கு சான்றிதழ் அளித்து பணி நியமனமும் வழங்கப்பட்டுள்ளது. அந்த அர்ச்சகர்களில் 3 பேர் பெண்கள்  ஆவர்.

இதுகுறித்து பெருமிதம் வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.

ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது #திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்... என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சமீபத்திய செய்திகள்

news

ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கான விசா கட்டணம் அதிரடி உயர்வு!

news

சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஏன்?...இபிஎஸ் சரமாரி கேள்வி

news

தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி

news

மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

news

'தடை நியாயமானதே..' டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்க மறுப்பு!

news

பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில்.. தெற்கு திசை நோக்கிய ஆலயம்!

news

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்

news

ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து

news

முதல் முறை வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு இபிஎஃப் ரூ.15,000 ஊக்கத்தொகை

அதிகம் பார்க்கும் செய்திகள்