- தா. சிலம்பரசி
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 அன்று அனுசரிக்கப்படும் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம், நாம் “வேறுபாடு” என்று கருதும் பல தனித்துவங்களின் பின்னால் இருக்கும் அற்புதமான மனித நேயத்தையும் உள் ஒளியையும் உணர்த்தும் ஒரு முக்கியமான நாள்.
ஆட்டிசம் என்பது குறைபாடு அல்ல; அது ஒரு தனித்துவமான உலகத்தை பார்க்கும் விதம். சிலர் சொற்களில் பேசுவார்கள்; சிலர் கண்களில் பேசுவார்கள். சிலர் சத்தமில்லா அமைதியின் வழியே உணர்வுகளை பகிர்வார்கள். அவர்கள் மௌனம் பலவீனம் அல்ல, அளவற்ற திறன்களின் மறைமுகம்.

இந்த நாளின் நோக்கம்,
அவர்களை “சிறப்பு குழந்தைகள்” என்று பிரித்து விடுவது இல்லை; அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கு நம்பிக்கை, பொறுமை, பாதுகாப்பு, அன்பு வழங்குவதே. இந்த நாளில் நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டியது:
ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு மலராய் மலர்கிறது.
அவர்களின் வேகமும், வழியும் மாறலாம்; ஆனால் அவர்களின் மதிப்பு குறையாது. அவர்களை புரிந்து கொள்வதே உண்மையான கல்வி. அவர்களை பாதுகாப்பதே சமூகத்தின் பொறுப்பு.
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் ஒரு குழந்தையின் கையைப் பிடித்து “நீ தனியாக இல்லை… நாங்கள் உன் பக்கமே இருக்கிறோம்” என்று சொல்லும் மனிதநேயத்தின் நாள்.
உணர்வுகளை புரிந்துகொண்டு அணைத்தாற்போல் ஏற்றுக்கொள்வோம்… அவர்களின் உலகத்தை ஒளிரச் செய்வோம்.
(தா சிலம்பரசி, வேலூர் மாவட்டம்)
ஆளுக்கு முந்தி சீட் வாங்கியாச்சு.. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் திணறும் காங்., பாஜக!
தமிழ்நாட்டின் பெயரை பிரதமர் மாற்றுவார் என்பது அப்பட்டமான பொய்: நயினார் நாகேந்திரன்
எதையெல்லாம் செய்ய முடியாதோ அதையெல்லாம் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிவது தான் திமுகவினரின் வேலை:விஜய்
திருச்சி கிழக்கில் விஜய்.. சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்!
விஜயகாந்த் குறித்து அவமரியாதை.. பியூஷ் கோயலின் சந்தர்ப்பவாத பேச்சு.. எல்.கே.சுதீஷ் கண்டனம்
மாலினியின் மாயாஜாலம்.. இல்லத்தரசி டூ யோகா ஆசிரியை - ஒரு தன்னம்பிக்கை பயணம்!
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பாம்: சென்னை வானிலை மையம் தகவல்!
தங்கம் விலை அதிரடி சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 குறைந்தது!
மனித குலத்தின் பாவங்களுக்காக கல்வாரியில் நடந்தேறிய உயிர்த் தியாகம்.. புனித வெள்ளி
{{comments.comment}}