- தா. சிலம்பரசி
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 அன்று அனுசரிக்கப்படும் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம், நாம் “வேறுபாடு” என்று கருதும் பல தனித்துவங்களின் பின்னால் இருக்கும் அற்புதமான மனித நேயத்தையும் உள் ஒளியையும் உணர்த்தும் ஒரு முக்கியமான நாள்.
ஆட்டிசம் என்பது குறைபாடு அல்ல; அது ஒரு தனித்துவமான உலகத்தை பார்க்கும் விதம். சிலர் சொற்களில் பேசுவார்கள்; சிலர் கண்களில் பேசுவார்கள். சிலர் சத்தமில்லா அமைதியின் வழியே உணர்வுகளை பகிர்வார்கள். அவர்கள் மௌனம் பலவீனம் அல்ல, அளவற்ற திறன்களின் மறைமுகம்.

இந்த நாளின் நோக்கம்,
அவர்களை “சிறப்பு குழந்தைகள்” என்று பிரித்து விடுவது இல்லை; அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கு நம்பிக்கை, பொறுமை, பாதுகாப்பு, அன்பு வழங்குவதே. இந்த நாளில் நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டியது:
ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு மலராய் மலர்கிறது.
அவர்களின் வேகமும், வழியும் மாறலாம்; ஆனால் அவர்களின் மதிப்பு குறையாது. அவர்களை புரிந்து கொள்வதே உண்மையான கல்வி. அவர்களை பாதுகாப்பதே சமூகத்தின் பொறுப்பு.
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் ஒரு குழந்தையின் கையைப் பிடித்து “நீ தனியாக இல்லை… நாங்கள் உன் பக்கமே இருக்கிறோம்” என்று சொல்லும் மனிதநேயத்தின் நாள்.
உணர்வுகளை புரிந்துகொண்டு அணைத்தாற்போல் ஏற்றுக்கொள்வோம்… அவர்களின் உலகத்தை ஒளிரச் செய்வோம்.
(தா சிலம்பரசி, வேலூர் மாவட்டம்)
ஒற்றைச் சொல்
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
கண்மணி!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
Work from Home: நவீன வாழ்வியலின் வரப்பிரசாதம்.. ஆனால் அதன் அருமை பலருக்குப் புரியலையே!
தொகுதியின் பெயருக்குப் பின் ப்ராக்கெட் தேவையில்லை .. முதல்வருக்கு விசிக எம்.பி கோரிக்கை
சிந்தனைச் சிதறல்.. தெரியாமல் இருப்பதைவிட, தெரிந்துகொள்ள முயலாமல் இருப்பதே ஆபத்தானது!
{{comments.comment}}