சென்னை அயலகத் தமிழர் நாள் விழாவில்.. வடஅமெரிக்க தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் புத்தக கண்காட்சி

Jan 11, 2025,12:19 PM IST

சென்னை : சென்னையில் நடைபெறும் அயலகத் தமிழர் நாள் விழாவில் வட அமெரிக்க தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் புத்தக கண்காட்சி இடம்பெற்றுள்ளது. 


அயலகத் தமிழர் நாள் விழா தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த ஆண்டும் தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 11யான இன்று தொடங்கி, நாளை வரை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும். 




தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் அயலகத் தமிழர் நாள் விழாவை தொடர்ந்து ஜனவரி 16, 17,18 ஆகிய தேதிகளில் வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பில் நடத்தப்படும் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.


2025 ம் ஆண்டின் அயலகத் தமிழர் நாளின் கருப்பொருளாக "எத்திசையும் தமிழணங்கே" என திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி 11 அன்று பிற்பகல் அயலகத் தமிழர் தின விழாவை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். 




இந்த புத்தகக் கண்காட்சியில் அயலகத் தமிழர் படைப்பாளிகள் எழுதிய புத்தகங்களும் காட்சி அரங்கில் இடம்பெற உள்ளன. இதில் வட அமெரிக்க தமிழ் எழுத்தாளர்கள் மன்றத்தை சேர்ந்த முனைவர் இர.பிரபாகரன், திருமதி நாகேஸ்வரி அண்ணாமலை, ஷீலா ரமணன், இலந்தை க.ராமசாமி உள்ளிட்ட ஏராளமான எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெற உள்ளன. 


இந்த புத்தக கண்காட்சியை பார்த்தசாரதி, ஆரூர் பாஸ்கர், கவிஞர் மருதயாழினி பிரதீபா, சுபா.காரைக்குடி ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்ய உள்ளனர்.




வட அமெரிக்காவில் இருந்த படியே இணையத்தின் வழியாக புதுவை முருகு, கவிஞர் வி.கிரெஸ் பிரதிபா ஆகியோர் வரவேற்பு வழங்க உள்ளனர். புத்தக காட்சி ஒருங்கிணைப்பினை ஷீலா ரமணன், நறுமுகை ஆகியோர் கவனிக்க உள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?

news

கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்

news

கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!

news

பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி

news

யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!

news

ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

news

மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்