சென்னை : சென்னையில் நடைபெறும் அயலகத் தமிழர் நாள் விழாவில் வட அமெரிக்க தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் புத்தக கண்காட்சி இடம்பெற்றுள்ளது.
அயலகத் தமிழர் நாள் விழா தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த ஆண்டும் தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 11யான இன்று தொடங்கி, நாளை வரை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும்.

தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் அயலகத் தமிழர் நாள் விழாவை தொடர்ந்து ஜனவரி 16, 17,18 ஆகிய தேதிகளில் வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பில் நடத்தப்படும் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.
2025 ம் ஆண்டின் அயலகத் தமிழர் நாளின் கருப்பொருளாக "எத்திசையும் தமிழணங்கே" என திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி 11 அன்று பிற்பகல் அயலகத் தமிழர் தின விழாவை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.

இந்த புத்தகக் கண்காட்சியில் அயலகத் தமிழர் படைப்பாளிகள் எழுதிய புத்தகங்களும் காட்சி அரங்கில் இடம்பெற உள்ளன. இதில் வட அமெரிக்க தமிழ் எழுத்தாளர்கள் மன்றத்தை சேர்ந்த முனைவர் இர.பிரபாகரன், திருமதி நாகேஸ்வரி அண்ணாமலை, ஷீலா ரமணன், இலந்தை க.ராமசாமி உள்ளிட்ட ஏராளமான எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெற உள்ளன.
இந்த புத்தக கண்காட்சியை பார்த்தசாரதி, ஆரூர் பாஸ்கர், கவிஞர் மருதயாழினி பிரதீபா, சுபா.காரைக்குடி ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்ய உள்ளனர்.

வட அமெரிக்காவில் இருந்த படியே இணையத்தின் வழியாக புதுவை முருகு, கவிஞர் வி.கிரெஸ் பிரதிபா ஆகியோர் வரவேற்பு வழங்க உள்ளனர். புத்தக காட்சி ஒருங்கிணைப்பினை ஷீலா ரமணன், நறுமுகை ஆகியோர் கவனிக்க உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Thoothukudi Airport.. தூத்துக்குடி விமான நிலைய பெயரை மாற்ற அமைச்சர் எல். முருகன் கோரிக்கை
நான் அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்... மகனை நினைத்து பொதுக்குழு மேடையில் அழுத ராமதாஸ்!
அதிமுக களத்தில் இல்லையா.. விஜய்க்கு எவ்வளவு தைரியம்... நாவை அடக்கி பேச வேண்டும்: செல்லூர் ராஜூ
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அவல ஆட்சி... திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்: நயினார் நாகேந்திரன்
பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் ஒப்புதல்
அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...புத்தாண்டில் காத்திருக்கும் அதிரடிகள்
2026ம் ஆண்டு என்ன நடக்கும்?...பாபா வாங்காவின் பகீர் கிளப்பும் கணிப்புகள்
சபரிமலை மண்டல பூஜை காலத்தில் ரூ.332.77 கோடி வருமானம்
{{comments.comment}}