25 பெண் ஆளுமைகளுக்கு சாதனைப் பெண் விருது.. சென்னையில் நடந்த விழாவில் கோலாகலம்

Mar 10, 2025,04:54 PM IST

சென்னை: பல்வேறு துறைகளைச் சேர்ந்த 25 பெண் ஆளுமைகளுக்கு சாதனைப் பெண் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.


திருச்சியைச் சேர்ந்த நந்தவனம் பவுண்டேசன் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சாதனைப் பெண்கள் விருது 2025 வழங்கப்பட்டது. இதற்கான விழா சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தி விஜய் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. 




சிறப்பு விருந்தினர்களாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபன ஆலோசகர் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர், திருச்சி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் தலைவர் டாக்டர் கே. சீனிவாசன், இலங்கை தினகரன் நாளிதழ் முதன்மை ஆசிரியர் தே. செந்தில்வேலவர், மதுரை தங்கமயில் ஜுவல்லரி நிறுவன தலைமை செயல்பாட்டு அதிகாரி வி. விஸ்வநாராயன், இலங்கை வீரகேசரி நாளிதழ் முதன்மை ஆசிரியர் ஸ்ரீகஜன், சென்னை லிட்டில் பிளவர் குழும தலைவர் ஜான் சேவியர், உலகளாவிய தமிழ்ப் பள்ளி இணை நிறுவனர் ராதிகா ஹரீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.




நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நந்தவனம் பவுண்டேசன் தலைவர் நந்தனவனம் சந்திரசேகரன், செயலாளர் எம். சாதிக் பாட்சா, பொருளாளர் பா. தென்றல் ஆகியோர் செய்திருந்தனர்.


இந்த விழாவில் சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி உள்பட 25 பெண் ஆளுமைகளுக்கு சாதனைப் பெண்கள் 2025 விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. இவர்களில் மலேசியாவில் இருந்து 8 பேரும், இலங்கையிலிருந்து 3 பேரும், பின்லாந்திலிருந்து ஒருவரும் அடக்கம். மற்றவர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.




சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ் இலக்கியம் மற்றும் சமூகம் சார்ந்த துறையில் சிறந்து விளங்கியமைக்காக இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்