25 பெண் ஆளுமைகளுக்கு சாதனைப் பெண் விருது.. சென்னையில் நடந்த விழாவில் கோலாகலம்

Mar 10, 2025,04:54 PM IST

சென்னை: பல்வேறு துறைகளைச் சேர்ந்த 25 பெண் ஆளுமைகளுக்கு சாதனைப் பெண் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.


திருச்சியைச் சேர்ந்த நந்தவனம் பவுண்டேசன் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சாதனைப் பெண்கள் விருது 2025 வழங்கப்பட்டது. இதற்கான விழா சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தி விஜய் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. 




சிறப்பு விருந்தினர்களாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபன ஆலோசகர் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர், திருச்சி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் தலைவர் டாக்டர் கே. சீனிவாசன், இலங்கை தினகரன் நாளிதழ் முதன்மை ஆசிரியர் தே. செந்தில்வேலவர், மதுரை தங்கமயில் ஜுவல்லரி நிறுவன தலைமை செயல்பாட்டு அதிகாரி வி. விஸ்வநாராயன், இலங்கை வீரகேசரி நாளிதழ் முதன்மை ஆசிரியர் ஸ்ரீகஜன், சென்னை லிட்டில் பிளவர் குழும தலைவர் ஜான் சேவியர், உலகளாவிய தமிழ்ப் பள்ளி இணை நிறுவனர் ராதிகா ஹரீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.




நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நந்தவனம் பவுண்டேசன் தலைவர் நந்தனவனம் சந்திரசேகரன், செயலாளர் எம். சாதிக் பாட்சா, பொருளாளர் பா. தென்றல் ஆகியோர் செய்திருந்தனர்.


இந்த விழாவில் சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி உள்பட 25 பெண் ஆளுமைகளுக்கு சாதனைப் பெண்கள் 2025 விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. இவர்களில் மலேசியாவில் இருந்து 8 பேரும், இலங்கையிலிருந்து 3 பேரும், பின்லாந்திலிருந்து ஒருவரும் அடக்கம். மற்றவர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.




சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ் இலக்கியம் மற்றும் சமூகம் சார்ந்த துறையில் சிறந்து விளங்கியமைக்காக இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மாவீரன் பொல்லான் சிலை.. திறந்து வைத்து புகழாரம் சூட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அரிதிலும் அரிதான சென்யார் புயல்.. இந்தோனேசியாவில் கரையைக் கடந்தது!

news

2 கைகள் கூப்பிய குறியீடு.. திருப்பிய பிரதமர் மோடி.. ராமர் கோவிலில் அரங்கேறிய புதிய டெக்னாலஜி!

news

ஓபிஎஸ்ஸின் புதிய கட்சி முடிவுக்கு இது தான் காரணமா.. யு டர்ன் போடுவது ஏன்?

news

திமுகவா.. தவெகவா?.. பரபரக்கும் களம்.. செங்கோட்டையனை சேகர்பாபு சந்தித்தது ஏன்? 4 வாய்ப்புகள்!

news

இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்குமானது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் கே.ஏ.செங்கோட்டையன்.. நாளை தவெகவில் சேருகிறாரா?

news

புதுச்சேரியில் ரோடுஷோ நடத்தும் தவெக.. விஜய்யின் மாஸான மாஸ்டர் பிளான் இது தானா?

news

நேற்றைய விலையை தொடர்ந்து தங்கம் விலை இன்றும் உயர்வு... சவரனுக்கு ரூ.640 உயர்வு!

அதிகம் பார்க்கும் செய்திகள்