- தமிழ்மாமணி இரா.கலைச்செல்வி
வீட்டைச் சுற்றி குடியிருந்த பசுமைத் தோட்டம்...,
இட நெருக்கடியால், சுதந்திரமாய் வேர் விட முடியாத ...,
மொட்டை மாடிக்கு
இன்று குடியேறிவிட்டது..!!
காமத் தீயில் வெந்து போனது, காமுகனின் மனசு.
வலி தாங்க முடியாமல் கதறுகிறாள் ...
ஏன் எனப் புரியாத சிறுமி..!!
சுமை தாங்கும் தோள்கள்..!!
சுழலும் பூமிக்கு அதுவே அச்சாணி..!!
இன்றைய உலகப் பார்வையில்
அவன் ஒரு ஏமாளி..!!

உழைப்பே உயிர் மூச்சு ..!!
உலகம் உய்யும் உன்னால்..!!
உன் வியர்வைத் துளிகள்
உலகின் சக்கரம்..!!
நெகிழியால் மூழ்கிய குப்பை மேடு.
பூமி அழுகிறது.
ஒரு முறை மட்டுமே உபயோகம்.
நிரந்தர பாதிப்பு.
நெகிழி தரும் பாடம்.
அடக்குமுறை வேண்டாம்.
ஆண் பெண் சமமே.
உலகம் செழிக்கும்.
சங்கிலிகள் உடைப்போம் .
சுதந்திரம் பெறுவோம் .
சரித்திரம் படைப்போம் .
வீடு அலுவலகம் இரட்டை சுமை.
தன்னந்தனியாய் போராட்டம்.
வாழா வெட்டி என்று பெயர்.
அணியும் ஆடையில்
தன்னம்பிக்கை பூக்கும்.
ஆடை நாகரிகம்.
வண்ண வண்ணக் மெல்லிய குழாய்கள்.
லெக்கின்ஸ் விலையோ குறைவு.
எக்கச்சக்க லாபம்.
உடல் வளைவுகள் காட்டும் லெக்கின்ஸ்.
வயிற்றுப் குழி காட்டும் டாப்ஸ்.
கண்கள் தானாக மூடிக் கொள்கிறது.
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
{{comments.comment}}