John Cena.. அதிர்ச்சி முடிவு.. WWE போட்டிகளிலிருந்து.. ஓய்வு பெறுகிறேன்.. ரசிகர்கள் சோகம்!

Jul 07, 2024,07:10 PM IST

டோரன்டோ: WWE எனப்படும் உலக மல்யுத்த பொழுதுப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஜான் செனா அறிவித்துள்ளார். இது உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


WWE போட்டிகள் உலகம் முழுவதும் பிரபலமானவை. இதற்கென்று பெருமளவில் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக ஜான் செனாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். வெறித்தனமான ரசிகர்களைக் கொண்ட வீரர்தான் ஜான் செனா. இந்த நிலையில் தனது ஓய்வை அறிவித்துள்ளார் ஜென் செனா.




கனடாவின் டோரன்டோ  நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டத்திற்கு முன்பு தனது ஓய்வு முடிவை அறிவித்தார் ஜான் செனா. தனது கடைசி போட்டி 2025ல் இருக்கும் என்றும், அத்துடன் தான் விடை பெறுவதாகவும் அறிவித்தார் ஜான் செனா.


கடந்த  20 வருடமாக WWE போட்டிகளில் பங்கேற்று வருகிறார் ஜான் செனா என்பது நினைவிருக்கலாம். தான் வந்தபோது இருந்ததை விட இப்போது  WWE போட்டிகள் நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக பெருமிதம் வெளியிட்டுள்ளார் ஜான் செனா.+


2025ம் ஆண்டு ரெஸில்மேனியா நிகழ்ச்சியில் சிறப்பு பங்கேற்பாளராக கலந்து கொள்ளவுள்ளார் ஜான் செனா. அதுதான் அவரது கடைசி WWE போட்டியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது 47 வயதாகும் ஜான் செனா 2001ம் ஆண்டு WWE போட்டிகளில் அறிமுகமானார். அதன் பிறகு அதில் படு வேகமாக பிரபலமடைந்தார். WWE போட்டிகளில் உலகப் புகழ் பெற்ற வீரர்களில் ஜான் செனா முக்கியமானவர். 16 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற சாதனையாளரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

Maman movie.. நடிகர் சூரியை.. பலே பாண்டியா என்று புகழாரம் சூட்டிய.. கவிஞர் வைரமுத்து..!

news

ஐபிஎல்லில் கோட்டை விட்டாலும்.. இந்தியா ஏ டீமில் ஸ்கோர் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

news

தாய் மண்ணே வணக்கம் (கவிதை)

news

Tourist Family.. படம் சூப்பர்.. உங்க தங்கமான மனசுக்கு மிக்க நன்றி ரஜினி சார்.. சசிகுமார் நெகிழ்ச்சி

news

2026 தேர்தலுக்கு.. தவெக கேட்கப் போகும் சின்னம் என்னாவா இருக்கும்.. எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

news

Roston Chase.. வெஸ்ட் இண்டீஸ் Test அணிக்கு புதிய கேப்டன்.. 2 வருட கேப்புக்குப் பிறகு விளையாடுகிறார்!

news

ஆபரேஷன் சிந்தூர் அதிரடி எதிரொலி.. பாதுகாப்புத்துறை பட்ஜெட் ரூ.50,000 கோடி அதிகரிக்க வாய்ப்பு

news

ஜூலை 4 முதல் 10ம் தேதி வரை துணைத்தேர்வுகள் நடைபெறும்: அரசுத் தேர்வுகள் இயக்கம்

news

இது வெறும் டிரெய்லர் தான்... ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை... மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

அதிகம் பார்க்கும் செய்திகள்