டோரன்டோ: WWE எனப்படும் உலக மல்யுத்த பொழுதுப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஜான் செனா அறிவித்துள்ளார். இது உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
WWE போட்டிகள் உலகம் முழுவதும் பிரபலமானவை. இதற்கென்று பெருமளவில் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக ஜான் செனாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். வெறித்தனமான ரசிகர்களைக் கொண்ட வீரர்தான் ஜான் செனா. இந்த நிலையில் தனது ஓய்வை அறிவித்துள்ளார் ஜென் செனா.

கனடாவின் டோரன்டோ நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டத்திற்கு முன்பு தனது ஓய்வு முடிவை அறிவித்தார் ஜான் செனா. தனது கடைசி போட்டி 2025ல் இருக்கும் என்றும், அத்துடன் தான் விடை பெறுவதாகவும் அறிவித்தார் ஜான் செனா.
கடந்த 20 வருடமாக WWE போட்டிகளில் பங்கேற்று வருகிறார் ஜான் செனா என்பது நினைவிருக்கலாம். தான் வந்தபோது இருந்ததை விட இப்போது WWE போட்டிகள் நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக பெருமிதம் வெளியிட்டுள்ளார் ஜான் செனா.+
2025ம் ஆண்டு ரெஸில்மேனியா நிகழ்ச்சியில் சிறப்பு பங்கேற்பாளராக கலந்து கொள்ளவுள்ளார் ஜான் செனா. அதுதான் அவரது கடைசி WWE போட்டியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 47 வயதாகும் ஜான் செனா 2001ம் ஆண்டு WWE போட்டிகளில் அறிமுகமானார். அதன் பிறகு அதில் படு வேகமாக பிரபலமடைந்தார். WWE போட்டிகளில் உலகப் புகழ் பெற்ற வீரர்களில் ஜான் செனா முக்கியமானவர். 16 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற சாதனையாளரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.
ரபேல் விமானத்தில் பறந்தார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.. கலாம், பிரதீபா பாட்டீல் வழியில் சாதனை
வைரலானது.. ஜப்பானின் முதல் பெண் பிரதமரின் கைப்பை.. உள்ளூர் நிறுவனத்திற்கு கிராக்கி!
பைந்தமிழே பயிற்று மொழி...!
Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு
ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!
{{comments.comment}}