ட்விட்டரில் இனி வீடியோ கால் பண்ணலாம்.. மீண்டும் பரபரப்பை கிளப்பிய எலன் மஸ்க்

Aug 31, 2023,03:22 PM IST
நியூயார்க் : எக்ஸ் என பெயர் மாற்றப்பட்டுள்ள ட்விட்டர் இனி வாய்ஸ் மற்றும் வீடியோ கால் பண்ணலாம் என அதன் நிறுவனர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.

எலன் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு பல மாற்றங்களை அடிக்கடி கொண்டு வந்த வண்ணம் உள்ளார். இதுவரை அவர் கொண்டு வந்த மாற்றங்களில் பலவும் குழப்பம் ஏற்படுத்துவதாகவும், ட்விட்டர் பயனாளர்களை அதிர்ச்சி அடைய வைப்பதாகவும் இருந்தது. சமீபத்தில் ட்விட்டரின் லோகோ, பெயர் என அனைத்தையும் மாற்றினார். ஆனால் தற்போது அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு அனைவரையும் வாவ் சொல்ல வைத்துள்ளது.



எக்ஸ் என பெயர் மாற்றப்பட்டுள்ள ட்விட்டரில் விரைவில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்யும் வசதி கொண்டு வரப்பட உள்ளதாக எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். இதற்கு முன் இம்மாத துவக்கத்திலேயே எக்ஸ் தளத்தின் வடிவமைப்பாளர் ஆன்டிரியா கோன்வே, இந்த மாதம் சுவாரஸ்யமான முக்கிய அறிவிப்பு ஒன்று வரப் போகிறது என கூறி இருந்தார். இதனால் அது என்ன தகவல் என பலரும் ஆர்வமாக கேட்டு வந்தனர். 

இந்நிலையில் எலன் மஸ்க் தனது புதிய போஸ்ட்டில், வீடியோ கால் வசதி பற்றி குறிப்பிட்டுள்ளார். அதோடு எந்த ஆன்டிராய்டு மற்றும் டுஓஎஸ் போனில் இருந்தும் ட்விட்டர் மூலம் கால் செய்ய முடியும். எதிர்முனையில் இருப்பவரின் கம்ப்யூட்டருக்கு நீங்கள் உங்கள் போனில் இருந்து கால் செய்து பேச முடியும். இதற்கு போன் நம்பர் எதுவும் அவசியம் கிடையாது என தெரிவித்துள்ளார். 

தற்போது ட்விட்டரில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் சேவை கொண்டு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக வீடியோ கால் வசதியும் கொண்டு வரப்பட உள்ளது. இது அதிகமானவர்கள் ட்விட்டர் மூலம் மற்றவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் இந்த வசதியை அனைவராலும் பயன்படுத்த முடியுமா என்பது பற்றி எந்த தகவலையும் எலன் மஸ்க் குறிப்பிடவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்