- க.யாஸ்மின் சிராஜூதீன்
அம்மா சமையல் அறையிலே
பாப்பா அம்மா அருகிலே
சமையலில் அம்மா மும்முரமாம்
பாப்பா விளையாட்டில் பம்பரமாம்
சாதம் உளையில் கொதிக்குதாம்
பாப்பா அஞ்சறைப்பெட்டியை உடைத்ததாம்.....
அம்மா முகத்தில் கடுகு வெடித்ததாம்
பாப்பா முகத்தில் சிரிப்பு மலருதாம்...
முத்துப்பல்லை காட்டிச் சிரிக்குதாம்

அம்மா கோபம் பஞ்சாய் பறந்ததாம்
பாப்பாவுக்கு பரிசு கிடைத்ததாம்
விலைமதிப்பில்லா முத்த மழைதானாம்.....
அம்மாவுக்கு நிகர் அம்மாதான்
கடவுள் நமக்கு தந்த சிறந்த பரிசுதான்
கண்ணுக்கு தெரியும் தெய்வம்தான்
எப்போதும் நமக்கு பலம்தானாம்
பொக்கிஷமாய் காப்போம் நாமும்தான்......
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
சென்னை சூப்பர் கிங்ஸை.. 13 ஓவர்களிலேயே நசுக்கி எடுத்து.. பெரும் வெற்றியைத் தட்டிய ராஜஸ்தான்
ரூ.14.20 கோடி கார்த்திக் சர்மா.. பொசுக்கென்று ஜோலியை முடித்த ரூ. 30 லட்சம்!
Chennai Super Kings New Record: தோனி, ரெய்னா இல்லாமல்... 17 ஆண்டுகளில் இது முதல் முறை!
CSK in Trouble: அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்.. கடும் அப்செட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள
எம்.பியாக இருக்கும் திருமாவளவன்.. எம்.எல்.ஏவாக முடிவெடுத்தது ஏன்.. உற்று நோக்கும் திமுக!
திமுக விரைவில் விடைபெறப்போகிறது - கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம்
தர்மபுரியில் செளமியா.. முதல் முறையாக சட்டசபைத் தேர்தல் களத்தில்.. பெரம்பூரில் திலகபாமா!
தமிழகத்தில் பிரதமர் மோடி சூறாவளிப் பிரச்சாரம்.. சென்னையில் ஏப். 4ல் பிரம்மாண்ட ரோடு ஷோ!
போர்ச் சூழலை குழந்தைகளுக்கு எப்படி விளக்குவது? – பெற்றோருக்கான 15 வழிகாட்டுதல்கள்
{{comments.comment}}