குழந்தையின் குறும்பு

Feb 07, 2026,02:57 PM IST

- க.யாஸ்மின் சிராஜூதீன்


அம்மா  சமையல் அறையிலே 

பாப்பா அம்மா அருகிலே 

சமையலில் அம்மா மும்முரமாம் 

பாப்பா விளையாட்டில் பம்பரமாம் 

சாதம் உளையில் கொதிக்குதாம் 

பாப்பா அஞ்சறைப்பெட்டியை உடைத்ததாம்.....

அம்மா முகத்தில் கடுகு வெடித்ததாம் 

பாப்பா முகத்தில் சிரிப்பு மலருதாம்...

முத்துப்பல்லை காட்டிச் சிரிக்குதாம் 




அம்மா கோபம் பஞ்சாய் பறந்ததாம் 

பாப்பாவுக்கு பரிசு கிடைத்ததாம் 

விலைமதிப்பில்லா முத்த மழைதானாம்.....

அம்மாவுக்கு நிகர் அம்மாதான் 

கடவுள் நமக்கு தந்த சிறந்த பரிசுதான்

கண்ணுக்கு தெரியும் தெய்வம்தான் 

எப்போதும் நமக்கு பலம்தானாம் 

பொக்கிஷமாய் காப்போம் நாமும்தான்......


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!

news

இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

news

கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!

news

வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!

news

உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு

news

தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்

news

DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!

news

"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!

news

ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்