- க. யாஸ்மின் சிராஜூதீன்
கேட்கவே இனிமையாக உள்ளதே "சந்தோஷம் ".......
இதனை நமதாக்கிக் கொண்டால் என்ன...... ???
இதனை வெளியே
தேடுவதேனோ....
கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதனாலோ...... !!!!!!
நம்முள்ளே நம்முடன் இணைந்த சந்தோஷத்தை மறந்ததேனோ... !!!!!
பிறரைப் பார்த்து அவரின் சந்தோஷத்தை நமதாக்க ஏங்குவதேனோ......!!!!!
நம் குடிசையே நமக்கு சந்தோஷம் அளிக்கும் போது...
மாளிகையைப் பார்த்து அந்த சந்தோஷத்திற்கு ஏங்குவதேனோ....!!!!
மனதை வாடச் செய்வதற்காகவோ ......!!!

நம்முடனே இருந்து
நமக்கு சந்தோஷம் அளிக்கும்
சந்தோஷத்தை விரும்பி அனுபவித்திடுவோம்... !!!!
எட்டாத சந்தோஷத்தை நினைத்து ஏங்குவதைவிட...
எட்டிய சந்தோஷத்தை அனுபவிப்பவனே
வாழ்க்கையை ரசித்து வாழ்பவனாவான்.... !!!!
ஒவ்வொரு நொடியும் ரசித்து வாழ்ந்திடுவோம்......
சேமிக்க முடியாத நேரத்தை
இனிய நினைவுகளாய் சேமித்திடுவோம்....!!!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}