- க. யாஸ்மின் சிராஜூதீன்
சும்மா நின்று வேடிக்கை பார்ப்பதை விட சிறந்தது பங்கேற்பு......
வெற்றியும் தோல்வியும் பங்கேற்பவனுக்கே .....
வெற்றியில் மகுடமும்
தோல்வியில் மகுடத்தை அடைவதற்கான வழியும்
அடங்கியுள்ளதை மறுக்க முடியுமா....
பங்கேற்பவனுக்கே இது சாத்தியம்.....

வேடிக்கை பார்ப்பவர்களும்,
தயக்கம் கொள்பவர்களும் சிகரம் தொடலாம்
பங்கேற்கும் எண்ணம் கொண்டால்.....
தோல்வியில் அடங்கியுள்ளது வெற்றிக்கான தந்திரங்கள் ...
வெற்றியில் அடங்கியுள்ளது தொடர் முயற்சியும் பயிற்சியும் .....
இவையனைத்தும் அடங்கியுள்ளது
"பங்கேற்பு" என்ற நுழைவு வாயிலில்......
பங்கேற்று வெற்றி கொள்வோம்
என்னால் முடியுமென்று வீரமுழக்கம்
கொள்வோம்.....
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
Mini Series: பயணப்பிரியன் .. விஷாலின் விளையாட்டுகள் 5
மகாவீரர்.. அன்பின் வழியை காட்டினார்.. உயிர் அனைத்தும் ஒன்று என்றார்!
மொத்த குடும்பமும் விஜய்க்கு கடனாளிகளா?.. புஸ்ஸி ஆனந்த் பெயரும் இருக்கு.. இதைக் கவனிச்சீங்களா?
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு - பொதுமக்கள் மீது சுமத்தப்படும் நியாயமற்ற சுமை: செல்வப்பெருந்தகை
ஏன் இப்படி?
ADR Report: புதுச்சேரியில் 23% வேட்பாளர்கள் மீது கிரிமினல் கேஸ்... 41% பேர் கோடீஸ்வரர்கள்!
Case against Vijay: தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்தது ஏன்?.. தலைமை தேர்தல் அதிகாரி கேள்வி
Gold Rate: தொடர் உயர்வில் இருந்த தங்கம் இன்று குறைந்தது... அதுவும் சவரனுக்கு ரூ.800 குறைவு!
CM MK Stalin campaign: திருவாரூரில் இன்று பிரச்சாரத்தை துவக்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}