- மயிலாடுதுறை வீ.யோகாஸ்ரீ
உருளைக்கிழங்கு கூட்டு ,உருளைக்கிழங்கு வறுவல் என்று சாப்பிட்டு அலுத்து போய் விட்டதா? உருளைக்கிழங்கை மொறு மொறுப்பாக வறுத்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
நொறுக்கு தீனிக்கு பதிலாகவும் இதை சாப்பிடலாம். சாயந்திரம் பள்ளி விட்டு வரும் பிள்ளைகளுக்கு இதை செஞ்சு கொடுங்க.. அப்புறம் உங்களை விட மாட்டாங்க.
வாங்க எப்படி செய்வது என்று பார்ப்போம் .
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு-1/4kg
மஞ்சள் தூள்-1/4தேக்கரண்டி
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி
கர மசாலா தூள் அல்லது மிளகுத்தூள் -1/2தேக்கரண்டி
பெருங்காயத்தூள் -1/4தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை ஒரே அளவிலான துண்டுகளாக நறுக்கி, அதிகப்படியான மாவுச்சத்தை நீக்க தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளவும்.
கொதிக்கும் நீரில் நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து 2-3 நிமிடங்கள் மட்டும் வேக வைத்து, தண்ணீரை முற்றிலும் வடித்துவிடவும்.
வடித்து எடுத்த உருளைக்கிழங்குடன் , மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா அல்லது மிளகுத்தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி ஐந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி நன்றாக கொதித்த பிறகு,மிதமான தீயில், 5 நிமிடங்கள் கிளறிக்கொண்டே வதக்கினால், வெளிப்புறம் மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வறுவல் தயார்.
குறிப்பு: உருளைக்கிழங்கை தண்ணீரில் வடித்த பின், சிறிது நேரம் காற்றில் உலர்த்தினால் வறுவல் இன்னும் மொறுமொறுப்பாக இருக்கும்.
பேரம் பேச வேண்டிய அவசியமில்லை – விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்
பெருந்தன்மையின் பொருள்.. விஷால் விளையாட்டுக்கள் (19)
பொது வாழ்வில் இருந்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஓய்வு அறிவிப்பு! அதிர்ச்சியில் திமுகவினர்
சேலத்து மாம்பழம்.. பெங்களூரா மாம்பழம்... தித்திப்பா சாப்பிடுவோம்!
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்...காரணம் இது தான்
உயிரை உலுக்கும் பனி.. 200 வகையான சாப்பாடு.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 7)
உன்னை அறிந்தால்!
Motivational Monday: தற்செயல் தரிசனங்கள்!
சிந்தனைச் சிதறல்.. வறுமை என்ற புத்தகத்தின் வரிகள் வலிகள் நிறைந்தது!
{{comments.comment}}