இலங்கையில்.. ராஜபக்சே மகன் யோஷிதா ராஜபக்சே திடீர் கைது.. சொத்துக் குவிப்பு வழக்கில் நடவடிக்கை!

Jan 25, 2025,10:40 AM IST

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் மகன் யோஷிதா ராஜபக்சேவை இலங்கை போலீஸார் கைது செய்துள்ளனர்.


சொத்துக் குவிப்பு வழக்கில் யோஷிதா கைது செய்யப்பட்டிருப்பதாக இலங்கை குற்ற புலனாய்வு காவல்துறை தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் புத்திகா மனதுங்கா கூறுகையில், பெலியத்தாவில் வைத்து இன்று காலை யோஷிதா ராஜபக்சே கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பிறகு பிற விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.




இலங்கை கடற்படையில் லெப்டினன்ட்  பதவி வகித்தவர் யோஷிதா ராஜபக்சே. மகிந்தா ராஜபக்சேவின் 2வது மகன் ஆவார். இவர் மீது பல வருடங்களாகவே பல்வேறு வகையான புகார்கள் இருந்து வருகின்றன. கடந்த 2016ம் ஆண்டு கூட இவர் நிதி முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம். அப்போது நிதிக் குற்றம் தொடர்பான சிறப்புக் காவல்படை அவரைக் கைது செய்திருந்தது.


மகிந்தா ராஜபக்சேவுக்கு மொத்தம் 3 பிள்ளைகள். இதில் முதல் மகன் பெயர் நமல் ராஜபக்சே. இவர் ராஜபக்சே அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். அடுத்தவர்தான் யோஷிதா ராஜபக்சே. கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். 3வது மகன் பெயர் ரோஹிதா ராஜபக்சே. 



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்... அம்பலமான திமுக அரசின் புளுகு: அன்புமணி காட்டம்

news

4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை

news

ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!

news

பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்