கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் மகன் யோஷிதா ராஜபக்சேவை இலங்கை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் யோஷிதா கைது செய்யப்பட்டிருப்பதாக இலங்கை குற்ற புலனாய்வு காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் புத்திகா மனதுங்கா கூறுகையில், பெலியத்தாவில் வைத்து இன்று காலை யோஷிதா ராஜபக்சே கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பிறகு பிற விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையில் லெப்டினன்ட் பதவி வகித்தவர் யோஷிதா ராஜபக்சே. மகிந்தா ராஜபக்சேவின் 2வது மகன் ஆவார். இவர் மீது பல வருடங்களாகவே பல்வேறு வகையான புகார்கள் இருந்து வருகின்றன. கடந்த 2016ம் ஆண்டு கூட இவர் நிதி முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம். அப்போது நிதிக் குற்றம் தொடர்பான சிறப்புக் காவல்படை அவரைக் கைது செய்திருந்தது.
மகிந்தா ராஜபக்சேவுக்கு மொத்தம் 3 பிள்ளைகள். இதில் முதல் மகன் பெயர் நமல் ராஜபக்சே. இவர் ராஜபக்சே அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். அடுத்தவர்தான் யோஷிதா ராஜபக்சே. கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். 3வது மகன் பெயர் ரோஹிதா ராஜபக்சே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!
35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?
IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா
இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்
ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?
{{comments.comment}}