தெரிந்தும் தெரியாது என்கிறாய்?

Dec 22, 2025,04:21 PM IST

- கவிஞர் சு நாகராஜன்


குடி குடியை கெடுக்கும்- என

தெரிந்தும் குடிக்கிறாய் 


புகை ஊதினால் 

புற்றுநோய் உண்டாகும் -எனத் 

தெரிந்தும் புகைக்கிறாய் 


திருடினால் 

திருடன் பட்டம் பெறுவாய் -என

தெரிந்தும் திருடுகிறாய் 


வேகமாய் சென்றால்

விபத்து ஏற்படும் -என 

தெரிந்தும் வேகமாய் செல்கிறாய் 




வருமானம் மீறி

கடன் வாங்கினால்

கஷ்டம் உண்டாகும்- எனத்

தெரிந்தும் வட்டிக்கு

பணம் பெறுகிறாய் 


கல்வி அறிவு இல்லாமல்

கற்றவர் சபையில் 

இடமில்லை- எனத்

தெரிந்தும் கல்வியை 

புறக்கணிக்கிறாய் 


உழைத்தால் தான் 

ஊதியம் உண்டு- எனத்

தெரிந்தும் உழைக்காமல்

நேரம் வீணாக்குகிறாய் 


எல்லாம் தெரிந்து

செய்துவிட்டு- நான்

தெரியாமல் செய்து விட்டேன் 

என்று மனம் வருந்தும்

மனிதனே- உன்னை 

என்ன சொல்வது


(கவிஞர் சு நாகராஜன், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தொகுதி மறுவரையறை.. அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு!

news

Double Meaning talks: மனிதர்கள் எப்போது டபுள் மீனிங் + கெட்ட வார்த்தையில் பேச ஆரம்பிக்கிறார்கள்?

news

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026 : அறிவிக்கப்பட்ட திட்டங்களும், ஒதுக்கப்பட்ட நிதியும்

news

தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகள் ஏமாற்றம்...எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

news

புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையனுடன் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் திடீர் சந்திப்பு

news

பிரதமர் மோடியின் 2026-ஆம் ஆண்டு வெளிநாட்டு பயணச் செலவு: மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

news

“வெற்றிப் பயணம் தொடரட்டும்!”: அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

news

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026-27: திமுக, தேமுதிக.,வின் கருத்து என்ன?

news

முருக பக்தியின் மகத்துவம் பேசும் ஆடி கிருத்திகை –காவடி, பால்குடம், பக்தி பேரலை

அதிகம் பார்க்கும் செய்திகள்