- கவிஞர் சு நாகராஜன்
குடி குடியை கெடுக்கும்- என
தெரிந்தும் குடிக்கிறாய்
புகை ஊதினால்
புற்றுநோய் உண்டாகும் -எனத்
தெரிந்தும் புகைக்கிறாய்
திருடினால்
திருடன் பட்டம் பெறுவாய் -என
தெரிந்தும் திருடுகிறாய்
வேகமாய் சென்றால்
விபத்து ஏற்படும் -என
தெரிந்தும் வேகமாய் செல்கிறாய்

வருமானம் மீறி
கடன் வாங்கினால்
கஷ்டம் உண்டாகும்- எனத்
தெரிந்தும் வட்டிக்கு
பணம் பெறுகிறாய்
கல்வி அறிவு இல்லாமல்
கற்றவர் சபையில்
இடமில்லை- எனத்
தெரிந்தும் கல்வியை
புறக்கணிக்கிறாய்
உழைத்தால் தான்
ஊதியம் உண்டு- எனத்
தெரிந்தும் உழைக்காமல்
நேரம் வீணாக்குகிறாய்
எல்லாம் தெரிந்து
செய்துவிட்டு- நான்
தெரியாமல் செய்து விட்டேன்
என்று மனம் வருந்தும்
(கவிஞர் சு நாகராஜன், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்)
Iran War: ஈரான் மீதான போர் நிறுத்தி வைப்பு: அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
அதிமுக கூட்டணியில் பாஜக-27, அமமுக-11, பாமக -18 தொகுதிகள் ஒதுக்கீடு
நான் ஒருவன் தான் உண்மையான எதிர்க்கட்சி...தமிழர் கட்சி சீமான் ஆவேசம்
ஒரு கார் வாங்க எங்களுக்கு தகுதி இல்லையா?...பிரஸ்மீட்டில் கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செம மழை காத்திருக்கிறது.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!
தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு வராத ஜி.கே.வாசன்...காரணம் இது தானா?
வீரத்தின் அடையாளம்.. மறக்க முடியாத பஞ்சாப் சிங்கம் பகத்சிங்!
திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை: நயினார் நாகேந்திரன் தாக்கு!
திருத்துறைப்பூண்டி பொன்னிறை புற்றடி மாரியம்மன் கோவில் திருவிழா
{{comments.comment}}