- கவிஞர் சு நாகராஜன்
குடி குடியை கெடுக்கும்- என
தெரிந்தும் குடிக்கிறாய்
புகை ஊதினால்
புற்றுநோய் உண்டாகும் -எனத்
தெரிந்தும் புகைக்கிறாய்
திருடினால்
திருடன் பட்டம் பெறுவாய் -என
தெரிந்தும் திருடுகிறாய்
வேகமாய் சென்றால்
விபத்து ஏற்படும் -என
தெரிந்தும் வேகமாய் செல்கிறாய்

வருமானம் மீறி
கடன் வாங்கினால்
கஷ்டம் உண்டாகும்- எனத்
தெரிந்தும் வட்டிக்கு
பணம் பெறுகிறாய்
கல்வி அறிவு இல்லாமல்
கற்றவர் சபையில்
இடமில்லை- எனத்
தெரிந்தும் கல்வியை
புறக்கணிக்கிறாய்
உழைத்தால் தான்
ஊதியம் உண்டு- எனத்
தெரிந்தும் உழைக்காமல்
நேரம் வீணாக்குகிறாய்
எல்லாம் தெரிந்து
செய்துவிட்டு- நான்
தெரியாமல் செய்து விட்டேன்
என்று மனம் வருந்தும்
(கவிஞர் சு நாகராஜன், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்)
பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?
Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?
2025ம் ஆண்டை அதிர வைத்த கரூர்.. ஷாக் கொடுத்த சார்.. செங்கோட்டையனால் ஷேக் ஆன அதிமுக!
தமிழக பொங்கல் பரிசு எப்போது ? வெளியான செம தகவல்
இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை
புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்
The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு
ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!
{{comments.comment}}