- கவிஞர் சு நாகராஜன்
குடி குடியை கெடுக்கும்- என
தெரிந்தும் குடிக்கிறாய்
புகை ஊதினால்
புற்றுநோய் உண்டாகும் -எனத்
தெரிந்தும் புகைக்கிறாய்
திருடினால்
திருடன் பட்டம் பெறுவாய் -என
தெரிந்தும் திருடுகிறாய்
வேகமாய் சென்றால்
விபத்து ஏற்படும் -என
தெரிந்தும் வேகமாய் செல்கிறாய்

வருமானம் மீறி
கடன் வாங்கினால்
கஷ்டம் உண்டாகும்- எனத்
தெரிந்தும் வட்டிக்கு
பணம் பெறுகிறாய்
கல்வி அறிவு இல்லாமல்
கற்றவர் சபையில்
இடமில்லை- எனத்
தெரிந்தும் கல்வியை
புறக்கணிக்கிறாய்
உழைத்தால் தான்
ஊதியம் உண்டு- எனத்
தெரிந்தும் உழைக்காமல்
நேரம் வீணாக்குகிறாய்
எல்லாம் தெரிந்து
செய்துவிட்டு- நான்
தெரியாமல் செய்து விட்டேன்
என்று மனம் வருந்தும்
(கவிஞர் சு நாகராஜன், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்)
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)
Poem: அமுதென இனிக்கும் அன்புடை நாயகனே!
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தாயாக, தந்தையாக அரவணைத்தவரை மறந்த ஒரு மகனின் தேடல்
தந்தை எனும் ரத்தினம்
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
இறைவன் அளித்த இணையற்ற அருட்கொடை
இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
{{comments.comment}}