திருநெல்வேலியில் பயங்கரம்.. கோர்ட் முன் இளைஞர் வெட்டிக்கொலை.. சில மணி நேரங்களில் பிடிபட்ட 7 பேர்!

Dec 20, 2024,02:26 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட நீதிமன்றம் முன்னர் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை நடந்த சில மணி நேரத்திலேயே 7  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் முன்பு மாயாண்டி என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். காரில் வந்த  மர்ம நபர்கள் இளைஞரை நீதிமன்ற வாசலில் வைத்து சரமாரியாக வெட்டித் தள்ளி விட்டுத் தப்பினர். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 




இது பற்றி அறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கொலையானவர் கீழநத்தத்தை சேர்ந்த சண்முகம் மகன் மாயாண்டி என்பதும், அவர் கொலை வழக்கு ஒன்றில் ஆஜராக நீதிமன்றம் வந்திருந்ததாகவும் தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட மாயாண்டி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், கடந்த 2023ம் ஆண்டு கீழ நத்தத்தில் ஊராட்சி உறுப்பினராக இருந்து ராஜாமணி என்பவர் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது. 


இந்த சம்பவத்தின் போது கொலைக் கும்பலைச் சேர்ந்த ஒருவரை அங்கிருந்த வழக்கறிஞர்களும், பொதுமக்களும் மடக்கிப் பிடித்தனர். பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் கொலை நடந்த சற்று நேரத்திலேயே கொலையாளிகளை போலீசார் பிடித்துள்ளனர். இதுவரை இந்த கொலையில் சம்பந்தப்பட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், விசாரணை தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்த சதிச் செயலில் ஈடுபட்ட மற்றவர்களையும் பிடிக்க போலீஸார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

25, 26 தேதிகளில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.. இந்திய வானிலை ஆய்வு மையம்..!

news

இன்றிரவு முதல் மழை அதிகரிக்கும்‌.. அடுத்த 10 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன்..!

news

பொதுவெளிகளில் அறிக்கை வெளியிட.. நடிகர் ரவி மோகன், மனைவி ஆர்த்திக்கு ஹைகோர்ட் தடை

news

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!

news

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய நிபந்தனைகளை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

news

கோடை விடுமுறைக்கு பின்னர்... திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் 2ம் தேதி திறப்பு!

news

அரபிக் கடலில்.. வலுப்பெற்றது.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் தகவல்!

news

வங்கதேசத்தில் மீண்டும் அரசியல் குழப்பம்...பதவி விலகுகிறார் முகமது யூனுஸ்

news

2026 இல் மக்கள் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள்: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்