திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட நீதிமன்றம் முன்னர் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை நடந்த சில மணி நேரத்திலேயே 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் முன்பு மாயாண்டி என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். காரில் வந்த மர்ம நபர்கள் இளைஞரை நீதிமன்ற வாசலில் வைத்து சரமாரியாக வெட்டித் தள்ளி விட்டுத் தப்பினர். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது பற்றி அறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கொலையானவர் கீழநத்தத்தை சேர்ந்த சண்முகம் மகன் மாயாண்டி என்பதும், அவர் கொலை வழக்கு ஒன்றில் ஆஜராக நீதிமன்றம் வந்திருந்ததாகவும் தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட மாயாண்டி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், கடந்த 2023ம் ஆண்டு கீழ நத்தத்தில் ஊராட்சி உறுப்பினராக இருந்து ராஜாமணி என்பவர் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது.
இந்த சம்பவத்தின் போது கொலைக் கும்பலைச் சேர்ந்த ஒருவரை அங்கிருந்த வழக்கறிஞர்களும், பொதுமக்களும் மடக்கிப் பிடித்தனர். பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் கொலை நடந்த சற்று நேரத்திலேயே கொலையாளிகளை போலீசார் பிடித்துள்ளனர். இதுவரை இந்த கொலையில் சம்பந்தப்பட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், விசாரணை தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்த சதிச் செயலில் ஈடுபட்ட மற்றவர்களையும் பிடிக்க போலீஸார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
டிட்வா புயலால் நமக்கு மழை எப்படி இருக்கும்.. கலைஞர் ஸ்டைலில் பதில் சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்!
ஜனவரி + தேர்தல் வரப் போகுது.. பொங்கல் பரிசு என்ன கிடைக்கும்.?.. எதிர்பார்ப்பில் மக்கள்!
ஓசூர் விமான நிலையம்.. TIDCOவின் புதிய டெண்டர்.. தமிழக - கர்நாடக எல்லையில் ஒரு கேம் சேஞ்சர்!
இம்ரான் கான் உயிரோடு இருப்பதற்கு என்ன ஆதாரம்?.. கேட்கிறார் மகன் காசிம் கான்
ஆடி அசைந்து வரும் டித்வா புயல்.. சென்னையில் எப்போது மழை தொடங்கும்.. யாருக்கு ரெட்?
மூச்சு உள்ள வரை... அன்றும், இன்றும் என்றும் அதிமுக தான்...ஜெயக்குமார் உறுதி!
கருணாநிதிக்கு நெருக்கமானவர்.. கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற சிவக்குமாருக்கு.. முதல்வர் புகழாரம்
அரசுப் பள்ளிகளில் 'காக்கா முட்டை' கட்டாயம்.. அரசு உத்தரவு.. மாணவர்கள் ஹேப்பி!
ரூ. 95,000த்திற்கு உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.560 உயர்வு
{{comments.comment}}