ரிஷப் பந்த்தைக் காப்பாற்றிய இளைஞர்.. காதலியுடன் விஷம் குடித்தார்.. காதலர் தினத்தன்று ஷாக்!

Feb 15, 2025,05:40 PM IST

டெல்லி:   கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் கடந்த 2022ம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கிய சமயத்தில் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து அவரது உயிரைக் காப்பாற்றிய இளைஞர் தனது காதலியுடன் விஷம் குடித்துள்ளார். அதில் அவரது காதலி மரணமடைந்தார். அந்த இளைஞர் உயிருக்குப் போராடி வருகிறார்.


உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்தவர் ரஜத் குமார். அவரும் அவரது நண்பர் நிஷு குமார் கடந்த 2022ம் ஆண்டு தேசிய அளவில் பிரபலமானார்கள். இருவரும் ரூர்க்கி பகுதியில் ஒரு பேக்டரியில் வேலை பார்த்து வருகின்றனர். 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் பயணித்த மெர்சிடிஸ் கார் பெரும் விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த ரிஷாப் பந்த் படுகாயமடைந்தார்.




ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை ரஜத் குமாரும், அவரது நண்பரும்தான் மீட்டு மருத்துவமனைக்குத் தகவல் கொடுத்து ஆம்புலன்ஸை வரவழைத்து காப்பாற்றினார்கள். இது தேசிய அளவில் பேசுபொருளானது. குணமடைந்த பின்னர் இந்த இருவரையும் சந்தித்த ரிஷப் பந்த் அவர்களுக்கு நன்றி கூறினார். அவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்தார். அவர்களை ஹீரோ என்றும் புகழாரம் சூட்டியிருந்தார்.


இந்த நிலையில் தற்போது ரஜத் குமார் உயிருக்குப் போராடி வருகிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜத் குமாரும் (வயது 25), மனு காஷ்யப் (21 வயது) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இந்தக் காதலுக்கு குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. இதையடுத்து பிப்ரவரி 9ம் தேதி  முசாபர்நகரில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்திற்குச் சென்ற இருவரும் அங்கு வைத்து விஷம் குடித்து விட்டனர். இதுகுறித்து ரஜத் குமார் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். 


அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. விஷம் குடித்த நிலையில் இருவரும் மீட்கப்பட்டனர். இதில் மனு காஷ்யப் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். ரஜத் குமாரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜாதிப் பிரச்சினை காரணமாகவே இவர்களது காதலை குடும்பத்தினர் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதனால்தான் இருவரும் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்து விட்டதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.


தற்கொலை எதற்கும் தீர்வல்ல


எப்படி ஒரு உயிரைப் பறிக்கும் உரிமை நமக்கு இல்லையோ அதேபோலத்தான் நமது உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமையும் நமக்கு இல்லை.  எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல.. எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் உரிய ஆலோசனைகளை நாடுங்கள். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.


பிரச்சினைகள் தொடர்பாக தடுமாற்றமான மன நிலையில் இருந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொணடு உரிய ஆலோசனையைப் பெறத் தவறாதீர்கள்.


iCALL- 9152987821


Sneha Suicide Prevention Centre - 044 2464 0050

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

news

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

அதிகம் பார்க்கும் செய்திகள்