டெல்லி: கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் கடந்த 2022ம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கிய சமயத்தில் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து அவரது உயிரைக் காப்பாற்றிய இளைஞர் தனது காதலியுடன் விஷம் குடித்துள்ளார். அதில் அவரது காதலி மரணமடைந்தார். அந்த இளைஞர் உயிருக்குப் போராடி வருகிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்தவர் ரஜத் குமார். அவரும் அவரது நண்பர் நிஷு குமார் கடந்த 2022ம் ஆண்டு தேசிய அளவில் பிரபலமானார்கள். இருவரும் ரூர்க்கி பகுதியில் ஒரு பேக்டரியில் வேலை பார்த்து வருகின்றனர். 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் பயணித்த மெர்சிடிஸ் கார் பெரும் விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த ரிஷாப் பந்த் படுகாயமடைந்தார்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை ரஜத் குமாரும், அவரது நண்பரும்தான் மீட்டு மருத்துவமனைக்குத் தகவல் கொடுத்து ஆம்புலன்ஸை வரவழைத்து காப்பாற்றினார்கள். இது தேசிய அளவில் பேசுபொருளானது. குணமடைந்த பின்னர் இந்த இருவரையும் சந்தித்த ரிஷப் பந்த் அவர்களுக்கு நன்றி கூறினார். அவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்தார். அவர்களை ஹீரோ என்றும் புகழாரம் சூட்டியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது ரஜத் குமார் உயிருக்குப் போராடி வருகிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜத் குமாரும் (வயது 25), மனு காஷ்யப் (21 வயது) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இந்தக் காதலுக்கு குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. இதையடுத்து பிப்ரவரி 9ம் தேதி முசாபர்நகரில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்திற்குச் சென்ற இருவரும் அங்கு வைத்து விஷம் குடித்து விட்டனர். இதுகுறித்து ரஜத் குமார் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. விஷம் குடித்த நிலையில் இருவரும் மீட்கப்பட்டனர். இதில் மனு காஷ்யப் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். ரஜத் குமாரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாதிப் பிரச்சினை காரணமாகவே இவர்களது காதலை குடும்பத்தினர் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதனால்தான் இருவரும் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்து விட்டதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல
எப்படி ஒரு உயிரைப் பறிக்கும் உரிமை நமக்கு இல்லையோ அதேபோலத்தான் நமது உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமையும் நமக்கு இல்லை. எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல.. எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் உரிய ஆலோசனைகளை நாடுங்கள். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.
பிரச்சினைகள் தொடர்பாக தடுமாற்றமான மன நிலையில் இருந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொணடு உரிய ஆலோசனையைப் பெறத் தவறாதீர்கள்.
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}