தோனி குறித்த சர்ச்சை பேச்சு.. அப்பாவுக்கு மன நலன் சரியில்லை.. அன்றே சொன்ன யுவராஜ் சிங்!

Sep 03, 2024,04:38 PM IST

மும்பை: என் தந்தைக்கு மனநலம் குன்றி இருக்கிறது. ஆனால், அதை ஒப்பு கொள்ள மாட்டார். அது குறித்து அவர் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் என தனது தந்தையின் சர்ச்சை பேச்சு குறித்து 2023ம் ஆண்டு யுவராஜ்சிங் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இந்தியா கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர்களாக இருந்தவர்கள் தான் யுவராஜ் சிங் மற்றும் தோனி. இருவரும் இணைந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி இந்திய அணிக்காக மகத்தான சாதனை  படைத்துள்ளனர். ஒரு கட்டத்தில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் யுவராஜ் சிங். அதன்பின்னர் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை சரிவை சந்தித்தது. 




இந்த நிலையில் யுவராஜ் சிங்கின் கெரியர் பாதிக்கப்பட்டதற்கு தோனிதான் காரணம் என்று அவ்வப்போது கூறி வருகிறார் யுவராஜின் தந்தையான யோக்ராஜ் சிங். இதுகுறித்து தோனி பதில் அளிப்பதே இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட தோனி குறித்து பேசிய யுவராஜ் தந்தை, தோனி தனது இறுதி காலகட்டத்தில் கையில் பணமே இல்லாமல் இருப்பார் என்று கூறியிருந்தார். 


இந்நிலையில், இப்போது மீண்டும் ஒருமுறை தோனியை  அவர் விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், என் வாழ்நாளில் ஒருபோதும் தோனியை நான் மன்னிக்கவே மாட்டேன். அவர் தனது முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர்.

ஆனால், எனது மகனுக்கு எதிராக அவர் செய்த அனைத்தும் இப்போது வெளி வருகிறது. என்னிடம் தவறு செய்தவர்களை நான் மன்னிக்க மாட்டேன். தோனி எனது மகனின் வாழ்க்கையையே அழித்து விட்டார். 


யுவராஜ் சிங் இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் விளையாடி இருப்பார்.யுவராஜ் சிங் போன்ற ஒரு மகனை முடிந்தால், நீங்கள் பெற்று எடுங்கள். கவுதம் கம்பீர் மற்றும் வீரேந்தர் சேவாக்கூட இதற்கு முன் இன்னொரு யுவராஜ் சிங் நமக்கு கிடைக்க மாட்டார் எனக் கூறியிருக்கின்றனர். புற்றுநோயுடன் விளையாடிய 2011ஆம் உலகக் கோப்பை வென்று கொடுத்த அவருக்கு இந்திய பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.


தனது தந்தையின் பேச்சுக்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் இருந்ததாக தோனி ரசிகர்கள் யுவராஜ் சிங்கை சாடி வந்தனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஒரு நேர்காணலில் பங்கேற்ற யுவராஜ் சிங் தனது தந்தை குறித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், தனது தந்தை ஒரு மெண்டல் என்றும் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும். எனினும் தமக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை அவர் ஒப்புக்கொள்ள மாட்டார் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2016லேயே நடந்திருக்க வேண்டியது.. தாமதமாக திமுக கூட்டணிக்கு வந்துள்ளோம்.. பிரேமலதா விஜயகாந்த்

news

திமுக-தேமுதிக கூட்டணி.. கேப்டனின் ஆன்மா மன்னிக்காது: தமிழக பாஜக எக்ஸ் தள பதிவு!

news

தேமுதிகவின் புதிய பயணம்... இப்ப எந்த நிலையில் இருக்கிறது தேமுதிகவின் வாக்கு வங்கி?

news

இனி ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.2000 வழங்கப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

news

தமிழகத்தில் தேனி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

news

காதல் படுத்தும் பாடு!

news

ஒரு மல்லிகை பூக்காரியின் அனுபவம்!

news

சிலிர்க்க வைக்கும் தமிழ்நாட்டு நாட்டுப்புறப் பாரம்பரியம்.. Dancing Through History: Tamil Nadu’s Fol

news

தன்னந்தனியாய் போராட்டம்.. கலையின் பல்பொருள் ஹைக்கூ கவிதைகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்