மனைவியைப் பிரிந்தார் யுஸ்வேந்திர சாஹல்.. 4 வருடத்தில் கசந்து போன வாழ்க்கை.. ரசிகர்கள் ஷாக்!

Feb 21, 2025,04:45 PM IST

டெல்லி: கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் தனது மனைவி தனஸ்ரீ வர்மாவை விவாகரத்து செய்துள்ளது கிரிக்கெட் மற்றும் நடன உலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி 4 வருடத்திலேயே இந்த மண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.


இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல லெக்-ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் புகழ்பெற்ற நடனக் கலைஞர் தனஸ்ரீ வர்மா விவாகரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020ல் உற்சாகமான முறையில் கோலாகலமாக நடந்த திருமணம் இது. இப்போது இது முடிவுக்கு வந்து விட்டது.


யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா ஆகிய இருவரும் தத்தமது பீல்டில் மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களிலும் மிகவும் பிரபலமான ஜோடியாக இருந்தனர். 2020-ல் இவர்கள் நிச்சயதார்த்த செய்து கொண்டார்கள், அப்போதே ரசிகர்கள் உற்சாகமாக இதை வரவேற்றனர். அதே ஆண்டில், அதாவது கொரோனா ஊரடங்கு காலத்தில், குடும்பத்தினரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது.




சோஷியல் மீடியாவில் தங்கள் காதலையும், சந்தோஷத்தையும் அடிக்கடி பகிர்ந்து வந்த இந்த தம்பதியினர், அவர்களின் உறவை  ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்து வந்தனர். இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே இருவரும் ஒன்றாக எங்குமே செல்லவில்லை. இருவரையும் சேர்ந்து பார்ப்பதும் குறைந்து போனது. இதனால் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.


இந்த நிலையில்தான் இருவரும் தனித்தனியாக வாழ்க்கையை தொடர தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும். விவாகரத்துக்கான காரணங்கள் பற்றி எந்த அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும் கூட அது உண்மையே என்று கூறப்படுகிறது. 


சாஹல்  தனஸ்ரீ ஜோடி, சமூக ஊடகங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனால், இவர்களின் பிரிவானது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிலர் இந்த முடிவு எதிர்பார்த்ததாகக் கூறினாலும், சிலர் இது கண்ணுக்குத் தெரியாத வேதனை என்று சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.


சாஹல் தற்போது ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். தனஸ்ரீ தனது நடன பயணத்தை தொடர்ந்து, புதிய நடனக் காணொளிகள் மற்றும் கல்வி வீடியோக்களுக்கான முயற்சிகளில் கவனம் செலுத்திவருகிறார். இருவரும் தனித்தனி பாதையில் பயணிக்கத் தீர்மானித்திருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்