மனைவியைப் பிரிந்தார் யுஸ்வேந்திர சாஹல்.. 4 வருடத்தில் கசந்து போன வாழ்க்கை.. ரசிகர்கள் ஷாக்!

Feb 21, 2025,04:45 PM IST

டெல்லி: கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் தனது மனைவி தனஸ்ரீ வர்மாவை விவாகரத்து செய்துள்ளது கிரிக்கெட் மற்றும் நடன உலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி 4 வருடத்திலேயே இந்த மண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.


இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல லெக்-ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் புகழ்பெற்ற நடனக் கலைஞர் தனஸ்ரீ வர்மா விவாகரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020ல் உற்சாகமான முறையில் கோலாகலமாக நடந்த திருமணம் இது. இப்போது இது முடிவுக்கு வந்து விட்டது.


யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா ஆகிய இருவரும் தத்தமது பீல்டில் மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களிலும் மிகவும் பிரபலமான ஜோடியாக இருந்தனர். 2020-ல் இவர்கள் நிச்சயதார்த்த செய்து கொண்டார்கள், அப்போதே ரசிகர்கள் உற்சாகமாக இதை வரவேற்றனர். அதே ஆண்டில், அதாவது கொரோனா ஊரடங்கு காலத்தில், குடும்பத்தினரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது.




சோஷியல் மீடியாவில் தங்கள் காதலையும், சந்தோஷத்தையும் அடிக்கடி பகிர்ந்து வந்த இந்த தம்பதியினர், அவர்களின் உறவை  ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்து வந்தனர். இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே இருவரும் ஒன்றாக எங்குமே செல்லவில்லை. இருவரையும் சேர்ந்து பார்ப்பதும் குறைந்து போனது. இதனால் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.


இந்த நிலையில்தான் இருவரும் தனித்தனியாக வாழ்க்கையை தொடர தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும். விவாகரத்துக்கான காரணங்கள் பற்றி எந்த அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும் கூட அது உண்மையே என்று கூறப்படுகிறது. 


சாஹல்  தனஸ்ரீ ஜோடி, சமூக ஊடகங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனால், இவர்களின் பிரிவானது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிலர் இந்த முடிவு எதிர்பார்த்ததாகக் கூறினாலும், சிலர் இது கண்ணுக்குத் தெரியாத வேதனை என்று சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.


சாஹல் தற்போது ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். தனஸ்ரீ தனது நடன பயணத்தை தொடர்ந்து, புதிய நடனக் காணொளிகள் மற்றும் கல்வி வீடியோக்களுக்கான முயற்சிகளில் கவனம் செலுத்திவருகிறார். இருவரும் தனித்தனி பாதையில் பயணிக்கத் தீர்மானித்திருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி தருக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

news

காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!

news

திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைத்தது காங்கிரஸ்

news

மரபுக்கவிதை புதுக்கவிதையிலும் சிறந்து விளங்கியவர்..தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்

news

திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு: நயினார் நாகேந்திரன்!

news

திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை: எடப்பாடி பழனிச்சாமி

news

தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவு... துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று: அன்புமணி

news

ஜனநாயகன் விஜய்.. ஓவர் டூ மலேசியா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. டிசம்பர் 27ல் சரவெடி!

அதிகம் பார்க்கும் செய்திகள்