வீட்டுக்கு வீடு ஒரு "ஜெபி" இருந்தால்.. முதியோர் இல்லமே தேவைப்படாது!

Jul 20, 2023,09:35 AM IST
- பூஜா

லண்டன்:  இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெபி என்ற இரண்டு வயது பூனை, தனது காதுகேளாத உரிமையாளருக்கு மிகுந்த உதவியாக இருப்பதற்காக தேசிய அளவிலான விருதைப் பெற்று அசத்தியுள்ளது.

ஜெபி பூனைக்கு "இந்த ஆண்டின் சிறந்த பூனை" என்ற பட்டத்தைப் பெற்று அத்துடன் இந்திய மதிப்பில் ரூ. 21,000 ரொக்கப் பரிசையும் தட்டிச் சென்றுள்ளது.

லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருது வழங்கும் விழாவில் ஜெபி பூனை ஃபேமிலி ஃபர்-எவர்  (Family Forever) என்ற பிரிவில் கலந்து கொண்டது. இறுதிச் சுற்றில் பங்கேற்ற நான்கு பூனைகளில் ஜெபிக்கு அதிக வாக்குகள் கிடைத்து வெற்றி பெற்றது.



ஜெபி பூனையோட விசேஷம் என்ன தெரியுமா.. அதற்கு தனியாக சிறப்புப் பயிற்சி எதுவும் கொடுக்கப்பட்டதில்லையாம். இப்படி எந்த பயிற்சியும் தராமல்தான் அந்தப் பூனையானது உரிமையாளருக்கு பல வகைகளிலும் உதவி செய்து வருகிறது. ஆயிரக்கணக்கான பிற செல்லப்பிராணிகளிலிருந்து இந்த உயரிய விருதின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதே முதலில் ஒரு பெரிய சாதனை தான். 

ஜெபியின் 66 வயதான உரிமையாளரின் பெயர் ஜெனிவீவ் மோஸ். இவருக்கு காது கேட்காது. எந்த சத்தத்தையும் உணர முடியாது. இவரது பிரச்சினையைப் புரிந்து கொண்ட ஜெபி தானாகவே இவருக்கு உதவத் தொடங்கியது. எப்படின்னா,  யாராவது காலிங் பெல் அடித்தால், உடனே மோஸை இது போய்த் தட்டி கதவைத் தட்டுகிறார்கள் என்று உணர்த்துமாம்.  அதேபோல போன் அடித்தாலும் அதை உணர்த்துமாம். தானாகவே இதையெல்லாம் அது செய்யத் தொடங்கியுள்ளது.

இது மட்டுமா செய்யுது ஜெபி.. அவரோட செருப்பை எடுத்து வந்து கொடுக்குமாம். போஸ்ட் பாக்ஸில் லெட்டர் போடப்பட்டிருந்தால் அதைப் போய் எடுத்து வந்து கொடுக்குமாம். இன்ன பிற பொருட்களையும் கூட கொண்டு வந்து மோஸிடம் கொடுக்குமாம். வீட்டுக்கு ஏதாவது டெலிவரி வந்தால் போய் சமத்தாக வாங்கிக் கொண்டு வந்து கொடுக்குமாம்.

இரவில் புதிதாக எதாவது சத்தம் கேட்டால், மோஸை எழுப்பி, அவருக்கு அதைத் தெரியப்படுத்த அவரது தலையில் அடிப்பது, அவரரது காது கேட்கும் கருவியை கழற்றி வைத்திருந்தால் அதை ஓடிப் போய் எடுத்து வந்து கொடுப்பது என்று தன் உரிமையாளரை சுற்றி சுற்றி வந்து ஒரு பிள்ளை போல பார்த்துக் கொள்கிறது. 

இந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பற்றி ஜெபியின் உரிமையாளர் என்ன சொல்கிறார் தெரியுமா?

"ஜெபி இல்லாத வாழ்க்கையை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. தனிமையிலும் இனிமை காண எனக்கு உதவும் என் உறவு ஜெபி. பூனைகள் எவ்வளவு அன்புடனும் அக்கறையுடன் இருக்கும், மேலும் அவை மக்களின் வாழ்க்கையில் என்ன நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை உலகிற்குக் காட்டிய என் ஜெபியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்." என்று ஆனந்த கண்ணீருடன் கூறுகிறார். 

வீட்டுக்கு வீடு ஜெபி இருந்தால்.. எதிர்காலத்தில் முதியோர் இல்லமே தேவைப்படாது .. என்ன சொல்றீங்க?

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்