மகா கவிஞன் முறுக்கு மீசை முண்டாசுக் கவினுக்கு ஓவியாஞ்சலி!

Dec 11, 2025,07:02 PM IST

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.  இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தீவிரம், சமூக சீர்திருத்தம், பெண் விடுதலை எனப் பல தளங்களில் புரட்சிகரமான சிந்தனைகளை விதைத்தவர். அவரது காலத்தால் அழியாத கவிதைகள் மற்றும் எழுத்துக்கள் கோடிக் கணக்கான இந்தியர்களின் மனதில் தேசபக்தியை ஊட்டியது. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று தமிழின் பெருமையைப் பாடிய அந்த ஞானச் செருக்கின் நிமிர்ந்த நடையை நாமும் பின்பற்றி, அவரது முற்போக்குச் சிந்தனைகளை மனத்தில் ஏந்தி நடப்போம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்