
காலை 11 மணி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் 95.33 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. மொத்தம் உள்ள 16,288 பேருந்துகளில் 15,528 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஊதிய உயர்வு போன்ற 6 அம்ச கட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற போராட்டம் செய்து வரும் நிலையில்,சேலத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநருடன் அண்ணா தொழிற்சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மதுரை தலைமை அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை, ஆரணி, காஞ்சிபுரம், சேலம், திண்டிவனம்,போன்ற பல இடங்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோவை சுங்கம் பணிமனை முன்பு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். பஸ்களை மறித்து போராட்டம் நடத்தும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் எச்சரிக்கை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார் அமைச்சர் சிவசங்கர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு எதிரான வழக்கு விசாரணை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணை தொடங்கியுள்ளது.
மதுரையில் இருந்து நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தை பாதி வழியில் நிறுத்தி கோவில்பட்டி அருகே பயணிகளை இறக்கி விட்டனர். பாதி வழியிலேயே பயணிகளை இறக்கி விட்டதால் பயணிகள் தவிர்ப்புக்குள்ளாகினர். போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஓட்டுநரிடம் தொலைபேசியில் பேசியதால் இறக்கி விட்டதாக பயணிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரிக்கப்படவுள்ளது. வேலை நிறுத்தத்திற்கு தடை கோரி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு மதியம் 2:15 மணிக்கு அவசர வழக்காக நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அடங்கிய அமர்வு விசாரிக்க இருக்கிறது.
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக,சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதி பி. ஆர். ராமன் அமர்வில் இன்று மதியம் 2.15 மணிக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
மதுரையில் 98 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மொத்தமுள்ள 2069 பேருந்துகளில் 39 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படவில்லை. கும்பகோணத்தில் 91% பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மொத்தம் உள்ள 2,978 பேருந்துகளில் 2715 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நெல்லையில் 99 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 1617 பேருந்துகளில் 20 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படவில்லை.
சேலம் மாவட்டத்தில் 98 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மொத்தம் உள்ள 1,101 பேருந்துகளில் 1,079 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,051 பேருந்துகளில் 1952 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 5% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படவில்லை.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!