Live News

தமிழ்நாட்டில் மீண்டும் மழை Live Updates.. ஓதியூரில் 200 வீடுகளை சூழ்ந்த மழைநீர்

author
  • Jan 08, 2024,05:14 PM IST
  • Share
Connect with me on

சென்னை: தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக கன மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முதல் இடைவிடாமல் மழை பெய்கிறது. கன மழை காரணமாக தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மழை தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு இந்தப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.


Live Updates
  • Jan 08, 2024
    04:10 PM IST

    அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

    சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ,உள்ளிட்ட 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • Jan 08, 2024
    04:08 PM IST

    மரக்காணம் அருகே கந்தாடு ஏரி உடைந்தது

    மரக்காணம் கந்தாடு ஏரி உடைந்து 5 கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்தது. கந்தம் பாளையம், காணி மேடு பகுதிகளில் உள்ள தெருக்களில் மழை நீர் ஓடி ஆறு போல் காட்சியளிக்கிறது. 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள பயிர்கள் நீரில் மூழ்கியது.

  • Jan 08, 2024
    04:07 PM IST

    அடுத்த 3 மணி நேரத்தில்10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்பரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • Jan 08, 2024
    03:41 PM IST

    ஓதியூரில் 200 வீடுகளை சூழ்ந்த மழைநீர்

    செங்கல்பட்டு ஓதியூரில் தொடர்மழையால் 200க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்துக் வருகின்றனர்.

  • Jan 08, 2024
    01:14 PM IST

    வட கிழக்குப் பருவ மழை தீவிரமாக உள்ளது - வானிலை மையம்

    வட கிழக்குப் பருவ மழை தொடர்ந்து தீவிரமாக உள்ளது. நான்காவது வருடமாக இந்த வருடமும் ஜனவரியில் மழை  தொடர்கிறது. 2 நாட்களுக்குப் பிறகு மழை படிப்படியாக குறையும். தென் மாவட்டங்களில் மழை தொடரும். சென்னைக்கு அதி கன மழைக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன் தகவல்.

  • Jan 08, 2024
    12:14 PM IST

    சீர்காழி வைத்தீஸ்வரன் கோயிலுக்குள் புகுந்த வெள்ளம்

    சீர்காழியில் பெய்த கன மழையால்  குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. சாலைகளையும் சூழ்ந்தது வெள்ள நீர். சீர்காழி அருகே உள்ள புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயிலுக்குள் மழை நீர் புகுந்தது.

  • Jan 08, 2024
    11:33 AM IST

    வைகை அணை நிரம்பியது.. சிம்மக்கல் தரைப்பாலம் மூழ்கியது

    கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.  வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சிம்மக்கல் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் கரையோரம் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • Jan 08, 2024
    11:30 AM IST

    தமிழகத்தில் இரண்டு கீழடுக்கு சுழற்சிகள்

    தமிழகத்தில் வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இரண்டு கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது இதனால் அடுத்த சில நாட்களுக்கு கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • Jan 08, 2024
    11:26 AM IST

    தமிழ்நாட்டில் 17 இடங்களில் மிக கனமழை

    தமிழ்நாட்டில் கொள்ளிடம், புவனகிரி, மீனம்பாக்கம், நன்னிலம், சேத்தியாந் தோப்பு, அண்ணாமலை நகர், திருத்துறைப்பூண்டி, காட்டுமன்னார்கோவில், குடவாசல், மரக்காணம், கொத்தவாஞ்சேரி, லால்பேட்டை, வானூர், கடலூர், உள்ளிட்ட 17 இடங்களில்  மிக கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  • Jan 08, 2024
    11:24 AM IST

    5 இடங்களில் அதி கன மழை.. 56 இடங்களில் கன மழை

    தமிழ்நாட்டில் சீர்காழி, சிதம்பரம், வேளாங்கண்ணி, திருவாரூர், நாகப்பட்டனம் ஆகிய இடங்களில் அதி கன மழை பதிவாியுள்ளது. அதேபோல 56 இடங்களில்  கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 24 செமீ மழை கொட்டி தீர்த்தது. சிதம்பரத்தில் 23 செமீ மழையும், வேளாங்கண்ணியில் 22 செமீ மழையும், திருவாரூர் மற்றும் நகையில் தலா 21 செமீ மழையும் பெய்துள்ளது.


  • {{val.updatedDate | dateToISO | date : "MMM dd, yyyy" }}
    {{val.updatedDate | dateToISO | date : "hh:mm a" }} IST

    {{val.headLine}}

மேலும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்