மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. இதற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதலில்த பால் வாக்குகள் எண்ணப்படும். பின்னர் இவிஎம்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். மீண்டும் ஆட்சியமைக்குமா பாஜக.. பாஜகவிடமிருந்து ஆட்சியைத் தட்டிப் பறிக்குமா இந்தியா கூட்டணி.. பரபரக்கும் தேர்தல் முடிவுகளைக் காண தென்தமிழ் இணையதளத்துடன் நேரலையாக இணைந்திருங்கள்.
தர்மபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ. மணி வெற்றி பெற்றுள்ளார்.
மதுரை தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் சு. வெங்கடேசன் 3,61,287 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார்.
கர்நாடகா- மாண்டியா தொகுதியில் முன்னாள் முதல்வரான எச்.டி குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார்.
பஞ்சாப் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் வேட்பாளருமான சரன்ஜித் சிங் சன்னி 1,76 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ரேபரேலி தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் பெற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.
விளங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 35,910 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் வெற்றி பெற்றார்.
ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி மட்டுமே 100 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?