மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. இதற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதலில்த பால் வாக்குகள் எண்ணப்படும். பின்னர் இவிஎம்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். மீண்டும் ஆட்சியமைக்குமா பாஜக.. பாஜகவிடமிருந்து ஆட்சியைத் தட்டிப் பறிக்குமா இந்தியா கூட்டணி.. பரபரக்கும் தேர்தல் முடிவுகளைக் காண தென்தமிழ் இணையதளத்துடன் நேரலையாக இணைந்திருங்கள்.

தர்மபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ. மணி வெற்றி பெற்றுள்ளார்.
மதுரை தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் சு. வெங்கடேசன் 3,61,287 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார்.
கர்நாடகா- மாண்டியா தொகுதியில் முன்னாள் முதல்வரான எச்.டி குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார்.
பஞ்சாப் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் வேட்பாளருமான சரன்ஜித் சிங் சன்னி 1,76 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ரேபரேலி தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் பெற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.
விளங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 35,910 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் வெற்றி பெற்றார்.
ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி மட்டுமே 100 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை
முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு
முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது
கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை
இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?
‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை
10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!
செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து