மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. இதற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதலில்த பால் வாக்குகள் எண்ணப்படும். பின்னர் இவிஎம்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். மீண்டும் ஆட்சியமைக்குமா பாஜக.. பாஜகவிடமிருந்து ஆட்சியைத் தட்டிப் பறிக்குமா இந்தியா கூட்டணி.. பரபரக்கும் தேர்தல் முடிவுகளைக் காண தென்தமிழ் இணையதளத்துடன் நேரலையாக இணைந்திருங்கள்.

தர்மபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ. மணி வெற்றி பெற்றுள்ளார்.
மதுரை தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் சு. வெங்கடேசன் 3,61,287 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார்.
கர்நாடகா- மாண்டியா தொகுதியில் முன்னாள் முதல்வரான எச்.டி குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார்.
பஞ்சாப் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் வேட்பாளருமான சரன்ஜித் சிங் சன்னி 1,76 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ரேபரேலி தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் பெற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.
விளங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 35,910 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் வெற்றி பெற்றார்.
ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி மட்டுமே 100 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
டி20 உலகக்கோப்பையில் திருப்பம்.. ‘புறக்கணிப்பு’ முடிவிலிருந்து பாகிஸ்தான் யூ-டர்ன்?
எழுந்தது முதல்.. இரவில் படுக்கையில் சாயும் வரை.. எங்கெங்கும் ஏஐ..!
Propse Day: காதலுக்கு முன்பு.. அன்பை வெளிப்படுத்துங்க.. அதை உணர்த்துங்க!
பொறுமையை சோதிக்கும் கூட்டணிக் கட்சிகள்.. அமைதியாக இருக்கும் திமுக.. என்ன நடக்கும்?
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட்:பிப்ரவரி 12ல் மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ
தமிழகத்தில் ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது: ஜி.கே.வாசன் பேட்டி
ராமதாஸ் பாமக வந்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்...திருமாவளவன் உறுதி
கிச்சனில் இருக்கும்போது கவனம் தோழியரே.. எண்ணெய் தீ விபத்தை.. தடுப்பது எப்படி?
ஒரு வாரத்துக்கு நகைக் கடை பக்கமே போகாமல் இருந்தால் தங்கம் விலை குறையுமா!?