மதுரை: தமிழகத்தில் ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், தேர்தலுக்கான அடித்தள பணிகளை தொடங்கி உள்ளோம், அதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. கோவையில் 14ம் தேதி, சென்னையில் 17ம் தேதி, திருச்சியில் 19ம் தேதி ஆலோசனை கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். எங்கள் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் விருப்ப மனுவை பூர்த்தி செய்து பிப்.25ம் தேதிக்குள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்
விஜய் கட்சியின் வாக்கு சதவீதம் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு சதவீதத்தை சொல்லி வருகிறார்கள், ஆனால் யாரும் 10 சதவீதத்திற்கும் குறைவாக சொல்லவில்லை. தமிழகத்தில் எதிர்மறை வாக்குகள் ஆட்சியாளர்களை எதிர்த்து அதிகரித்து வருகிறது என்பதற்கு மாற்றுக்கருத்து கிடையாது. குறிப்பாக போதை பொருட்கள் விற்கப்படுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். டாஸ்மார்க் கடையையும் மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குள் திருப்புவனம் காவலாளி அஜித் கொலை அதிர்ச்சியான சம்பவம் அதைத் தொடர்ந்து நெல்லையில் ஆணவ கொலை போன்ற செயல்பாடுகள் மிகுந்த அச்சத்தை தமிழக மக்களிடம் கொடுத்திருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொதுவாகவே அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டிய நிலை இருக்க வேண்டும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் இருப்பது அரசின் செயலற்ற தன்மையினை ஏடுத்துக்காட்டுகிறது.
ஓர் நதி ஓர் பௌர்ணமி ஓர் ஓடம்!
Idli Podi: இட்லி பொடி.. சுவையான பாரம்பரிய முறையில் எப்படி தயாரிக்கலாம்?
நிழல் மறைந்த நாள்.. தேவகோட்டை மாணவர்கள் பொதுமக்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வு!
வயதானாலும் நாங்களும் நல்லுள்ளங்களே!
Kalaiarasi Poem: ஆசை !
சிங்கப்பூரில் சிறப்பாக நடந்தேறிய பொழில் இலக்கியச் சங்கமம் 2026
ஒரு பக்க கட்டுரை.. முயற்சியின் மந்திரம்!
உலகக் கலை தினம்... World Art Day...!
மதுரை கிழவியை பெருமை செய்ய மண்ணை சுமந்தாய்!
{{comments.comment}}