திருச்சி: திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு வழித்தடங்களுக்கு BS6 வகையைச் சேர்ந்த 10 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யா மொழி துவக்கி வைத்தனர்.
திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று (20.07.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய பேருந்து இயக்க சேவையினை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், போக்குவரத்துக்கழக பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காற்றின் மாசுபாட்டை குறைக்கும் வகையில் ரூபாய் 634.99 கோடி மதிப்பில் 1666 பிஎஸ்6 ரக பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக அரசின் போக்குவரத்துத்துறை திட்டமிட்டது. அதன் முதற்கட்டமாக ரூ.37.98 கோடி மதிப்பிலான 100 புதிய பிஎஸ்6 ரக பேருந்துகள் இயக்கத்தை கடந்த ஜனவரியில் முதல்வர் தொடங்கி வைத்தார். அதன் படி திருச்சி மாவட்டத்திற்கு இன்று பிஎஸ் 6 நவீன வசதிகளுடன் கூடிய பஸ் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
உள்ளங்களின் பிணைப்பு.. சொற்களைக் கடந்த ஓர் உன்னதப் பயணம்!
தொகுதிப் பங்கீட்டில் இழுபறி - பிடிவாதம் காட்டும் இடதுசாரிகள்
கேஸ் சிலிண்டர் இல்லை.. பிறந்த நாளும் இல்லை.. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அண்ணாமலை கண்டனம்
பாட்டிலுக்குள் ஒரு உலகம்.. The World in the Bottle
திமுக செந்தில் பாலாஜிக்கு எதிராக விஜய்யின் தவெக துவக்கி உள்ள "டாக்கெட் கரூர்"
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் ஓடத் தொடங்கியது.. 18 வருஷக் கனவு பூர்த்தியாச்சு!
அதிமுக கூட்டணிக்கு வர விஜய் போட்ட 2 கன்டிஷன்...தீயாய் பரவும் தகவல்
கெளதம் கம்பீருக்கு உண்மையான சவால் இதுதான்.. வார்னிங் கொடுத்த கங்குலி
Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு
{{comments.comment}}