திருச்சியில் BS6 வகையைச் சேர்ந்த 10 புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்

Jul 20, 2024,05:04 PM IST

திருச்சி: திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு வழித்தடங்களுக்கு   BS6 வகையைச் சேர்ந்த 10 புதிய பேருந்துகளின்  சேவையை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யா மொழி துவக்கி வைத்தனர்.


திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று (20.07.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய பேருந்து இயக்க சேவையினை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.




இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், போக்குவரத்துக்கழக பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.


காற்றின் மாசுபாட்டை குறைக்கும் வகையில் ரூபாய் 634.99 கோடி மதிப்பில் 1666  பிஎஸ்6 ரக பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக அரசின் போக்குவரத்துத்துறை திட்டமிட்டது. அதன் முதற்கட்டமாக ரூ.37.98 கோடி மதிப்பிலான 100 புதிய பிஎஸ்6 ரக பேருந்துகள் இயக்கத்தை கடந்த ஜனவரியில் முதல்வர் தொடங்கி வைத்தார். அதன் படி திருச்சி மாவட்டத்திற்கு இன்று பிஎஸ் 6 நவீன வசதிகளுடன் கூடிய பஸ் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்