மதுரை திருமங்கலத்தில் 1000 கிலோ கறி, 2500 கிலோ அரிசி..ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் கறி விருந்து

Jan 04, 2025,07:12 PM IST

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் கறி விருந்து திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழா இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அனுப்பபட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள காவல் தெய்வம் தான் கரும்பாறை முத்தையா. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக மார்கழி மாதத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கறி விருந்து திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. பிறந்த பெண்  குழந்தை முதல் வயதான பாட்டி வரை உள்ள யாருக்கும் இத்திருவிழாவில் அனுமதி கிடையாது. இங்கு வெட்டப்படும் ஆடுகளும் இந்த கோயிலிலேயே வளர்க்கப்படுகின்றன.




இந்தாண்டிற்கான கரும்பாறை முத்தையா கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு 1 மணிக்கு கிடாய்கள் வெட்டப்பட்டு திருவிழா தொடங்கியது. 2500 கிலோ அரிசி மற்றும் 1000 கிலோ ஆட்டுக்கறி சமைக்கப்பட்டு கறி விருந்து படையல் செய்யப்பட உள்ளது. இந்த விழாவிற்காக மதுரையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆண்கள் குவியத் தொடங்கியுள்ளனர். 


இந்த கறி விருந்து திருவிழாவில் முதலில்  இலைகளில் கறி வைக்கப்படும், அதன்பின்னர் சாதமும் குழம்பும் ஊற்றப்பட்டு அன்னதானம் நடைபெறும். கறிவிருந்து சாப்பிட்ட இலைகளை யாரும் எடுக்க மாட்டார்களாம். அந்த இலைகள் காய்ந்த பின்னர் ஒரு வாரம் கழித்து தான் பெண்கள் அந்த கோவிலுக்கு சாமி குப்பிட வருவார்களாம்.அடுத்த ஆண்டு நடக்கும் திருவிழாவிற்காக ஆடுகள் தற்பொழுதே காணிக்கையாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆடுகள் கருப்பு நிறத்தில் மட்டும் தான் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Vizhinjam Port: விழிஞ்ஞம் துறைமுகம்.. இந்தியா மற்றும் கேரளாவின் வர்த்தக வளர்ச்சியில் புது அத்தியாயம்

news

நேஷனல் ஹெரால்டு வழக்கில்.. சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு.. டெல்லி கோர்ட் நோட்டீஸ்

news

3, 5,8 வகுப்பு மாணவர்களை.. fail ஆக்கும் நடைமுறையை ஒருபோதும் ஏற்க முடியாது: அமைச்சர் அன்பில் மகேஷ்

news

பாகிஸ்தான் வான்வெளி மூடப்படுவதால்.. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு $600 மில்லியன் இழப்பு!

news

வெயிலிலிருந்து தப்ப.. நீண்ட நேரம் AC இயக்கினால்.. என்னென்ன பிரச்சினையெல்லாம் வரும் தெரியுமா?

news

மதுரை சித்திரை திருவிழா... 4ம் தேதி முதல் பொருட்காட்சி.. 45 நாட்களுக்கு!

news

என் இதயமே.. மீண்டும் ஒரு காதல் கதையில் ஷிகர் தவான்.. இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்துகள்!

news

பயணிகளின் கோரிக்கையை ஏற்று.. புறநகர் ஏசி ரயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. தெற்கு ரயில்வே!

news

வாழ்த்து மழையில் நனையும்‌.. டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்.. கொண்டாடும் ரசிகர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்