மதுரை: மதுரை மாவட்டத்தில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் கறி விருந்து திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழா இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அனுப்பபட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள காவல் தெய்வம் தான் கரும்பாறை முத்தையா. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக மார்கழி மாதத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கறி விருந்து திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. பிறந்த பெண் குழந்தை முதல் வயதான பாட்டி வரை உள்ள யாருக்கும் இத்திருவிழாவில் அனுமதி கிடையாது. இங்கு வெட்டப்படும் ஆடுகளும் இந்த கோயிலிலேயே வளர்க்கப்படுகின்றன.
இந்தாண்டிற்கான கரும்பாறை முத்தையா கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு 1 மணிக்கு கிடாய்கள் வெட்டப்பட்டு திருவிழா தொடங்கியது. 2500 கிலோ அரிசி மற்றும் 1000 கிலோ ஆட்டுக்கறி சமைக்கப்பட்டு கறி விருந்து படையல் செய்யப்பட உள்ளது. இந்த விழாவிற்காக மதுரையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆண்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
இந்த கறி விருந்து திருவிழாவில் முதலில் இலைகளில் கறி வைக்கப்படும், அதன்பின்னர் சாதமும் குழம்பும் ஊற்றப்பட்டு அன்னதானம் நடைபெறும். கறிவிருந்து சாப்பிட்ட இலைகளை யாரும் எடுக்க மாட்டார்களாம். அந்த இலைகள் காய்ந்த பின்னர் ஒரு வாரம் கழித்து தான் பெண்கள் அந்த கோவிலுக்கு சாமி குப்பிட வருவார்களாம்.அடுத்த ஆண்டு நடக்கும் திருவிழாவிற்காக ஆடுகள் தற்பொழுதே காணிக்கையாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆடுகள் கருப்பு நிறத்தில் மட்டும் தான் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது என்று தெரியவில்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!
தந்தையை உளவு பார்த்த மகன்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டு வைத்த டாக்டர் ராமதாஸ்!
விஜய்யின் காஸ்ட்லி மிஸ்.. ஓபிஎஸ்ஸை தவற விட்டது எப்படி?.. திமுகவின் மின்னல் வேக ஸ்கெட்ச்!
நலம் காக்கும் ஸ்டாலின்... சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தங்கம் விலையில் அதிரடி... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!
தேசிய விருது பெற்ற.. பார்க்கிங் குழு.. தோழி ஊர்வசி.. தம்பி ஜி.வி.பிரகாஷுக்கு ..கமல்ஹாசன் வாழ்த்து!
ஆடிப்பெருக்கு.. நீரின்றி அமையாது உலகு.. தண்ணீர்த் தாயை போற்றி வணங்கி வழிபடுவோம்!
மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் மரணம்.. மாரடைப்பு.. சோட்டானிக்கரை ஹோட்டலில் பரபரப்பு!
{{comments.comment}}