மதுரை திருமங்கலத்தில் 1000 கிலோ கறி, 2500 கிலோ அரிசி..ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் கறி விருந்து

Jan 04, 2025,07:12 PM IST

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் கறி விருந்து திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழா இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அனுப்பபட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள காவல் தெய்வம் தான் கரும்பாறை முத்தையா. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக மார்கழி மாதத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கறி விருந்து திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. பிறந்த பெண்  குழந்தை முதல் வயதான பாட்டி வரை உள்ள யாருக்கும் இத்திருவிழாவில் அனுமதி கிடையாது. இங்கு வெட்டப்படும் ஆடுகளும் இந்த கோயிலிலேயே வளர்க்கப்படுகின்றன.




இந்தாண்டிற்கான கரும்பாறை முத்தையா கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு 1 மணிக்கு கிடாய்கள் வெட்டப்பட்டு திருவிழா தொடங்கியது. 2500 கிலோ அரிசி மற்றும் 1000 கிலோ ஆட்டுக்கறி சமைக்கப்பட்டு கறி விருந்து படையல் செய்யப்பட உள்ளது. இந்த விழாவிற்காக மதுரையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆண்கள் குவியத் தொடங்கியுள்ளனர். 


இந்த கறி விருந்து திருவிழாவில் முதலில்  இலைகளில் கறி வைக்கப்படும், அதன்பின்னர் சாதமும் குழம்பும் ஊற்றப்பட்டு அன்னதானம் நடைபெறும். கறிவிருந்து சாப்பிட்ட இலைகளை யாரும் எடுக்க மாட்டார்களாம். அந்த இலைகள் காய்ந்த பின்னர் ஒரு வாரம் கழித்து தான் பெண்கள் அந்த கோவிலுக்கு சாமி குப்பிட வருவார்களாம்.அடுத்த ஆண்டு நடக்கும் திருவிழாவிற்காக ஆடுகள் தற்பொழுதே காணிக்கையாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆடுகள் கருப்பு நிறத்தில் மட்டும் தான் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Diwali Special trains: பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு நாளை முதல்!

news

தமிழகத்தில் இன்று 10 மற்றும் நாளை 19 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை

news

வக்ஃபு திருத்தச் சட்டம்:உச்சநீதிமன்றம் சில பிரிவுகளுக்கு விதித்துள்ள தடையை வரவேற்கிறோம்:திருமாவளவன்

news

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து

news

நயினார் நாகேந்திரனும் சுற்றுப்பயணத்திற்கு ரெடி.. அக்டோபர் முதல்.. அண்ணாமலை தகவல்

news

துரோகத்தைத் தவிர வேறு எவும் தெரியாதவர் இபிஎஸ் நன்றியை பற்றி பேசுகிறாரா?.. டிடிவி தினகரன்

news

வொர்க் பிரம் ஹோம் தலைவராக இருந்த விஜய்.. வீக்கெண்டு தலைவராக மாறி இருக்கிறார் : தமிழிசை செளந்தரராஜன்

news

பின் தொடராதீர்கள்.. போலீஸ் விதித்த புதிய கட்டுப்பாடு.. பிரச்சார திட்டத்தில் மாற்றம் செய்த விஜய்

news

Nano Banana மோகம்.. புயலைக் கிளப்பிய கூகுள்.. ஆபத்தானது.. எச்சரிக்கும் நிபுணர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்