மதுரை திருமங்கலத்தில் 1000 கிலோ கறி, 2500 கிலோ அரிசி..ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் கறி விருந்து

Jan 04, 2025,07:12 PM IST

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் கறி விருந்து திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழா இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அனுப்பபட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள காவல் தெய்வம் தான் கரும்பாறை முத்தையா. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக மார்கழி மாதத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கறி விருந்து திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. பிறந்த பெண்  குழந்தை முதல் வயதான பாட்டி வரை உள்ள யாருக்கும் இத்திருவிழாவில் அனுமதி கிடையாது. இங்கு வெட்டப்படும் ஆடுகளும் இந்த கோயிலிலேயே வளர்க்கப்படுகின்றன.




இந்தாண்டிற்கான கரும்பாறை முத்தையா கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு 1 மணிக்கு கிடாய்கள் வெட்டப்பட்டு திருவிழா தொடங்கியது. 2500 கிலோ அரிசி மற்றும் 1000 கிலோ ஆட்டுக்கறி சமைக்கப்பட்டு கறி விருந்து படையல் செய்யப்பட உள்ளது. இந்த விழாவிற்காக மதுரையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆண்கள் குவியத் தொடங்கியுள்ளனர். 


இந்த கறி விருந்து திருவிழாவில் முதலில்  இலைகளில் கறி வைக்கப்படும், அதன்பின்னர் சாதமும் குழம்பும் ஊற்றப்பட்டு அன்னதானம் நடைபெறும். கறிவிருந்து சாப்பிட்ட இலைகளை யாரும் எடுக்க மாட்டார்களாம். அந்த இலைகள் காய்ந்த பின்னர் ஒரு வாரம் கழித்து தான் பெண்கள் அந்த கோவிலுக்கு சாமி குப்பிட வருவார்களாம்.அடுத்த ஆண்டு நடக்கும் திருவிழாவிற்காக ஆடுகள் தற்பொழுதே காணிக்கையாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆடுகள் கருப்பு நிறத்தில் மட்டும் தான் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!

news

இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!

news

கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்

news

வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!

news

தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!

news

SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி

news

ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

news

காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்