சென்னை: பிப்ரவரி 23ம் தேதி வேலூரில் தவெக நிர்வாகிகள் கூட்டத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, வரும் பிப்ரவரி 23, 2026 (திங்கட்கிழமை) அன்று வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி பகுதியில் பிரம்மாண்ட கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, வேலூர் கூட்டத்திற்கு மாவட்ட காவல்துறை கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதிய இடவசதி, குடிநீர் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்க க்யூ-ஆர் கோட் (QR Code) அடிப்படையிலான அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
பிப்ரவரி 23ம் தேதி வேலூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில், பங்கேற்க 4,900 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி. QR Code கொண்ட அனுமதிச் சீட்டுகள் ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே நிர்வாகிகள் கூட்டத்தில் அனுமதிக்கப்படுவர். பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பள்ளிக்குப் போகலாம்!
நீதி தவறா தமிழ் மன்னர்களை நினைவு கூற வேண்டிய நாள் இன்று!
கமகமக்கும் மதுரை சாம்பார்.. சாப்பிட்டுப் பாருங்க.. சும்மா அள்ளும்ல!
சில நிமிடங்களில் ஆழமான கருத்துக்கள்.. பச்சக்கென்று மனதில் பதிய வைக்கும்.. குறும்படங்கள்!
பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?
மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
ரமலான் மாதத்தில் நோன்பு ஏன் கடைபிடிக்கப்படுகிறது?
நேர்காணல்
அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்
{{comments.comment}}