10,11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியிட திட்டம்..மே 16ல் வெளியீடு..!

May 14, 2025,05:44 PM IST

சென்னை: 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே மே 16ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் . 


2024-24ஆம் கல்வி ஆண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 5-ம் தேதி  தொடங்கி மார்ச் 27-ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை மொத்தம் 8,23,261 பேர் எழுதினர். இதேபோல் 10ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன.




இத்தேர்வை சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 21 முதல் 30 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்துதல் பணிகள் நடைபெற்றன. தற்போது மதிப்பெண் பதிவேற்றம் பட்டியல் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பத்தாம் மற்றும் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டிய வெளியிட  திட்டமிட்டுள்ளது. 


அதன்படி, 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்  நாளை மறுநாளே (மே 16ஆம் தேதி)  வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


மேலும் 10, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.tnresults.nic.in, http://www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in, http://www.dge.tn.gov.in ஆகியவற்றில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி  அறிந்து கொள்ளலாம்.


முன்னதாக பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் ஒன்பதாம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ஒருநாள் முன்கூட்டியே மே எட்டாம் தேதி வெளியானதை போலவே பத்தாம் வகுப்பு பொது முடிவுகளும் முன்கூட்டியே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் பழனிச்சாமியின் வேலையாக இருக்கிறது: முதல்வர் தாக்கு!

news

விசாரித்தது சிபிஐ.. தீர்ப்பு வழங்கியது.. நீதிமன்றம்.. இதில் ஸ்டாலின் பங்கு என்ன?எடப்பாடி பழனிச்சாமி!

news

வார இறுதி நாட்கள்: சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

news

10,11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியிட திட்டம்..மே 16ல் வெளியீடு..!

news

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு.. யாரும் உரிமை கோர முடியாது : விசிக தலைவர் திருமாவளவன்!

news

பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமார் ஷா.. பத்திரமாக திரும்பினார்

news

தமிழக அரசு உழவர்களின் துயரத்தைப் போக்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

news

ஐபோன், ஐபேட்டில் பாதுகாப்பு குறைபாடா?...இந்திய அரசு விடுத்த புதிய எச்சரிக்கை

news

6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் மைக்ரோசாஃப்ட்...காரணம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்