சென்னை: 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே மே 16ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் .
2024-24ஆம் கல்வி ஆண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கி மார்ச் 27-ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை மொத்தம் 8,23,261 பேர் எழுதினர். இதேபோல் 10ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன.

இத்தேர்வை சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 21 முதல் 30 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்துதல் பணிகள் நடைபெற்றன. தற்போது மதிப்பெண் பதிவேற்றம் பட்டியல் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பத்தாம் மற்றும் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டிய வெளியிட திட்டமிட்டுள்ளது.
அதன்படி, 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை மறுநாளே (மே 16ஆம் தேதி) வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் 10, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.tnresults.nic.in, http://www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in, http://www.dge.tn.gov.in ஆகியவற்றில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம்.
முன்னதாக பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் ஒன்பதாம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ஒருநாள் முன்கூட்டியே மே எட்டாம் தேதி வெளியானதை போலவே பத்தாம் வகுப்பு பொது முடிவுகளும் முன்கூட்டியே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}