போபால்: மத்திய பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பேர் பலியானார்கள். 60க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஹர்தா என்ற இடத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி பட்டாசுகள் வெடித்துச் சிதறின. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பட்டாசு வெடித்து சிதறியது. அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது.

தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைக்க கடுமையாக போராடினர். விபத்தில் சிக்கிய பலர் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உதவிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையும் அழைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரிஷி கர்க் தெரிவித்தார். தீ விபத்தின் போது சுமார் 150 தொழிலாளர்கள் வளாகத்தில் இருந்ததாக தெரிகிறது. பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல்
இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்த விபத்தின் போது தீ கொழுந்து விட்டு எரிந்ததில் அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவி உள்ளது. இதனால் அந்தப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?
{{comments.comment}}