மத்திய பிரதேச பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 11 பேர் பலி.. 60 பேர் காயம்!

Feb 06, 2024,05:21 PM IST

போபால்: மத்திய பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பேர் பலியானார்கள். 60க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஹர்தா என்ற இடத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி பட்டாசுகள் வெடித்துச் சிதறின. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பட்டாசு வெடித்து சிதறியது. அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது. 




தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைக்க கடுமையாக போராடினர். விபத்தில் சிக்கிய பலர் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோரின்  நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.  தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


உதவிக்கு தேசிய பேரிடர் மீட்புப்  படையும் அழைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரிஷி கர்க் தெரிவித்தார். தீ விபத்தின் போது சுமார்  150 தொழிலாளர்கள் வளாகத்தில் இருந்ததாக தெரிகிறது. பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.


பிரதமர் மோடி இரங்கல்


இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.  விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.


இந்த விபத்தின் போது தீ கொழுந்து விட்டு எரிந்ததில் அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவி உள்ளது. இதனால் அந்தப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட வருகின்றனர். 

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்