இடுப்பில் கட்டிய துண்டுடன்.. சித்தி மீது புகார் கூறிய சிறுவன்.. ஆந்திராவில் பரபரப்பு!

May 16, 2023,09:35 AM IST
எலூரு, ஆந்திரப் பிரதேசம்: ஆந்திர மாநிலத்தில் ஒரு 11 வயது சிறுவன் போலீஸில் கொடுத்த சாதாரண புகாரை போலீஸார் விசாரிக்கப் போனபோது, அவனது சித்தி செய்த கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

எலூரு பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதான லட்சுமி. இவர் கோத்தபேட்டா என்ற இடத்தில் வசித்து வருகிறார். சமீபத்தில் இவர் மீது எலூரு காவல் நிலையத்தில் 11வயதான சிறுவன் ஒருவன் புகார் கொடுத்தான். என்ன காமெடி என்றால் அந்த சிறுவன் சட்டை போடமல், இடுப்பில் ஒரு துண்டை மட்டும் சுற்றியபடி வந்திருந்தான். அவனைப் பார்த்த போலீஸார் என்னடா இது என்று அவனை கூப்பிட்டு விசாரித்தனர். அப்போது சிறுவன் அவர்களிடம், லட்சுமி எனது வளர்ப்புத் தாய். எனது நண்பனின் பிறந்த நாளுக்கு நான் போக வேண்டும். இதற்காக வெள்ளைச் சட்டை கேட்டேன். சித்தி கொடுக்க மறுக்கிறார். அதனால்தான் துண்டைக் கட்டியபடி வந்தேன் என்று கூறியுள்ளான்.



புகாரைக் கேட்ட போலீஸார் சிரித்துக் கொண்டனர். இதெல்லாம் ஒரு பிரச்சினையாடா என்று கேட்ட அவர்கள், அவனது  சித்தியை காவல் நிலையத்துக்கு வரவழைத்தனர். அப்போதுதான் தனது சித்தி தனக்கு செய்த  கொடுமைகளை ஒவ்வொன்றாக பட்டியலிட ஆரம்பித்தான் சிறுவன்.

அதாவது சிறுவனின் தந்தை பெயர் மல்லிகார்ஜூன ராவ். இவர் ஒரு சாதாரண கூலித் தொழிலாளி  ஆவார். சரியான வருமானம் இல்லை. லட்சுமி, மல்லிகார்ஜுனாவின் 2வது மனைவி ஆவார். சிறுவனின் தாயார் இறந்து விட்டார். மல்லிகார்ஜூனா வேலைக்குப் போன பின்னர் சிறுவனை சித்திரவதை செய்து வந்துள்ளார் லட்சுமி. இரும்புக் கம்பியை பழுக்கக் காய்ச்சி சூடு போடுவது, அடிப்பது என்று கொடுமை செய்து வந்துள்ளார்.

முன்பு இப்படித்தான் ஒருமுறை கடுமையாக அடித்ததில் காயமடைந்த சிறுவனை மருத்துவமனையில் சேர்த்துக் காப்பற்றினார்களாம். இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார் லட்சுமியை கடுமையாக எச்சரித்தனர். இனிமேல்இது போல கொடுமைப்படுத்தக் கூடாது என்று எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்