சென்னை: தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார். இதில் மொத்தம் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழக பாடத்திட்டத்தில் 2025 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான 11-ம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் மூன்றாம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத்தேர்வை 8,23,261 மாணவர்கள் எழுதினர். இதனை அடுத்து தேர்வு முடிவுகள் வரும் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியானது இதனால் மாணவர்கள் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருந்தனர்.
இதற்கிடையே விடைத்தாள் திருத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணிவுகளும் விரைவில் முடிவடைந்தன. இதனால் தேர்வு முடிவுகள் 19ஆம் தேதிக்கு பதிலாக, மே 17ஆம் தேதி வெளியிட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருந்தது.

அதன்படி, தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். மாநிலம் முழுவதும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதாவது பொதுத்தேர்வு எழுதிய 8,07,098 பேரில் 7,43,232 பேர் தேர்ச்சி பெற்றனர்.
11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 6.43% அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு முடிவுகள் வெளியானதும், மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}