கொலம்பியா எல்லையில் விபத்துக்குள்ளான விமானம்.. எம்.பி உள்பட 15 பேர் பலி

Jan 29, 2026,11:20 AM IST
பொகோடா: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் எல்லைப் பகுதியில், 15 பேரை ஏற்றிச் சென்ற சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து விபத்துக்குள்ளானதில் 15 பேரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கொலம்பியாவின் சடேனா என்ற அரசு விமான நிறுவனத்துக்குச் சொந்தமான பீச்கிராஃப்ட் 1900 என்ற இரட்டை எஞ்சின் கொண்ட விமானம், நேற்று காலை எல்லை நகரான குகுட்டாவிலிருந்து ஒகானா என்ற இடத்தை நோக்கிப் புறப்பட்டது. இதில் 13 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் என மொத்தம் 15 பேர் பயணித்தனர்.

தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, மதியம் 12 மணியளவில் இந்த விமானம் ரேடார் திரையில் இருந்து திடீரென மறைந்தது. விமானம் மாயமான பகுதி அடர்ந்த காடுகள் மற்றும் மலைகள் நிறைந்த பகுதி என்பதால், தேடுதல் பணிகளில் கடும் சவால்கள் நிலவின.



யமான இந்த விமானத்தில் கொலம்பிய நாடாளுமன்ற உறுப்பினர் டியோஜெனெஸ் குயின்டெரோ மற்றும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவிருந்த வேட்பாளர் கார்லோஸ் சால்சிடோ ஆகியோரும் இருந்தனர். தற்போது இந்த விமானம் விபத்துக்குள்ளாகி அதில் இருந்த அனைவருமே பலியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்து நிகழ்ந்த பகுதியில் மோசமான வானிலை நிலவியதாகக் கூறப்படுகிறது. மேலும், இப்பகுதி கிளர்ச்சிக் குழுக்களின் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாகும். இதனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து கொலம்பிய விமான போக்குவரத்துத் துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!

news

வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்

news

முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்

news

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி

news

2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு

news

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!

news

டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி

news

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!

அதிகம் பார்க்கும் செய்திகள்