நண்பர்களுக்காக வைத்த இஃப்தார் விருந்தில் தீவிபத்து.. 16 பேர் பலி..  துபாயில் துயரம்

Apr 17, 2023,03:06 PM IST
துபாய் : துபாயில் தனது நண்பர்களுக்காக இஃப்தார் விருந்து தயாரித்து கொண்டிருந்த கேரள தம்பதி உள்ளிட்ட 16 பேர் அபார்ட்மென்ட் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கேரளாவைச் சேர்ந்தவர் ரிஜிஸ் களங்கதன் (38). இவர் துபாயில் உள்ள சுற்றுலாத்துறை கம்பெனி ஒன்றில் பிசினஸ் டெவலப்மென்ட் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெசி கண்டமங்களத் (32). இவர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்துவான இவர்கள் சமீபத்தில் சித்திரை விஷூ கொண்டாடி உள்ளனர்.



இது ரம்ஜான் நோன்பு மாதம் என்பதால் தங்களுடைய அக்கம் பக்கத்தில் உள்ள இஸ்லாமிய நண்பர்கள் உள்ளிட்டோருக்கு இஃப்தார் நோன்பு திறப்பின் போது அளிப்பதற்காக விஷூசத்யா என்ற பாரம்பரிய கேரள உணவு வகையை தயாரித்து கொண்டிருந்தனர். அப்போது இவர்களின் பக்கத்து பிளாட்டில் ஏற்பட்ட தீ பரவியதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

அபாட்மென்ட் கட்டிடத்தில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் போனதே விபத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த கேரள தம்பதி வருடந்தோறும் அனைவரையும் ஓணம் மற்றும் விஷூ பண்டிகைக்காக அழைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். தீ பரவியபோது அபார்மென்டில் இருந்து வெளியே வரும் போது தான் கேரள தம்பதியை கடைசியாக அவர்கள் பார்த்ததாகவும், தாங்கள் பார்த்த போது ஜெசி அழுது கொண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கு பிறகு அவர்களுக்கு போன் செய்த போது, அதற்கு அவர்கள் பதிலளிக்கவில்லை என சொல்லப்படுகிறது. உயிரிழந்த கேரள தம்பதி அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பலருக்கும் பல உதவிகள் செய்து வந்துள்ளனர். சனிக்கிழமை அன்று பகல் 12.35 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. உடனடியாக துபாய் குடிமக்கள் பாதுகாப்பு குழுவினர், தீயணைப்பு துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

பகல் 2.42 மணி வரை தீ எப்பகுதியில் எரிந்து கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. பகல் 3 மணியளவில் கிரேன் மூலம் மூன்றாவது மாடியில் இருப்பவர்களை வெளியேற்றி உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!

news

ஜீவனின் ஜீவிதம்!

news

பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!

news

மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்

news

மங்கலா.. சமூகத்தில் ஒரு ஒளி.. (மீண்டும் மங்கலம்.. மினி தொடர்கதை - 6)

news

ராகுல்காந்தி என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு!

news

சென்னையிலும், புறநகர்களிலும் ஜில் ஜில் மழை.. சிலுசிலுவென மாறிய கிளைமேட்.. என்ஜாய் பண்ணுங்க மக்களே!

அதிகம் பார்க்கும் செய்திகள்