17 வயது சிறுவனை.. விரட்டி விரட்டி வெட்டிக் கொன்ற கும்பல்.. 2 பேர் கைது.. !

Nov 15, 2023,12:59 PM IST

சென்னை: பட்டப்பகலில் 17 வயது சிறுவன் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை சேர்ந்த அந்த சிறுவன், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தான். சிறுவன் வீட்டில் இருக்கும் நேரம் பார்த்து இரண்டு பேர் சிறுவனை கொல்ல முயற்சித்துள்ளனர். அங்கிருந்து தப்பித்து அவன் ஓடியுள்ளான். ஆனாலும் விடாத அந்தக் கும்பல், ஓட  ஓட விரட்டி வெட்டி கொலை செய்துள்ளனர்.


ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி  சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். 




சம்பவம் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த கொலை தொடர்பாக தனசேகர், மற்றும் வினோத் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


இந்த கொலைக்கு என்ன காரணம், சிறுவனை ஏன் கொன்றனர், பின்புலம் எதுவும் இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் என்றும் பாராமல் கொடூரமாக கொலை செய்யத் துணிந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்