17 வயது சிறுவனை.. விரட்டி விரட்டி வெட்டிக் கொன்ற கும்பல்.. 2 பேர் கைது.. !

Nov 15, 2023,12:59 PM IST

சென்னை: பட்டப்பகலில் 17 வயது சிறுவன் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை சேர்ந்த அந்த சிறுவன், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தான். சிறுவன் வீட்டில் இருக்கும் நேரம் பார்த்து இரண்டு பேர் சிறுவனை கொல்ல முயற்சித்துள்ளனர். அங்கிருந்து தப்பித்து அவன் ஓடியுள்ளான். ஆனாலும் விடாத அந்தக் கும்பல், ஓட  ஓட விரட்டி வெட்டி கொலை செய்துள்ளனர்.


ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி  சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். 




சம்பவம் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த கொலை தொடர்பாக தனசேகர், மற்றும் வினோத் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


இந்த கொலைக்கு என்ன காரணம், சிறுவனை ஏன் கொன்றனர், பின்புலம் எதுவும் இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் என்றும் பாராமல் கொடூரமாக கொலை செய்யத் துணிந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்