சென்னை: பட்டப்பகலில் 17 வயது சிறுவன் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை சேர்ந்த அந்த சிறுவன், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தான். சிறுவன் வீட்டில் இருக்கும் நேரம் பார்த்து இரண்டு பேர் சிறுவனை கொல்ல முயற்சித்துள்ளனர். அங்கிருந்து தப்பித்து அவன் ஓடியுள்ளான். ஆனாலும் விடாத அந்தக் கும்பல், ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்துள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

சம்பவம் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக தனசேகர், மற்றும் வினோத் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த கொலைக்கு என்ன காரணம், சிறுவனை ஏன் கொன்றனர், பின்புலம் எதுவும் இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் என்றும் பாராமல் கொடூரமாக கொலை செய்யத் துணிந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!
திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!
மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்
பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?
தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!
த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!
இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?
எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!
{{comments.comment}}