நேபாளத்தில் விபரீதம்.. 19 பயணிகளுடன் சென்ற விமானம்.. விழுந்து நொறுங்கி 18 பேர் பலி!

Jul 24, 2024,04:56 PM IST

காத்மாண்டு:   நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே 19 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளானதில் 18 பேர் பலியாகியுள்ளனர்.


நேபாளம் தலைநகர் காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து 19 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டது. காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியது. ஓடுதளத்தில் சென்ற போது ஓடுபாதை சறுக்கி விமானம் விபத்துக்குள்ளானது. ஒடுபாதையில் சறுக்கிய விமானம் சில மணி துளிகளில்  தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர  விபத்தில் 18 பேர் உடல் கருகி பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.




இந்த விபத்து குறித்து அறிந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த விமான விபத்தால் காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விமானத்தில் பணியாளர்கள் உட்பட 19 பேர் இருந்த நிலையில், அவர்களின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது.இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இந்நிலையில் , தீயை அணைத்து மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில், 18 பேர்களின் உடல்  கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. விமானி மணிஷ் ஷக்யா படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நேபாளத்தில் கடந்த 2010ம் ஆண்டு முதல் 12 விமான விபத்துக்கள் நடந்துள்ளன. நேபாள நாட்டில் விமான விபத்து என்பது அடிக்கடி நடைபெற்று வருகிறது. சராசரியாக ஆண்டுக்கு ஒரு விமான விபத்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

news

அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!

news

Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்

news

ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!

news

Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!

news

அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

அதிகம் பார்க்கும் செய்திகள்