நேபாளத்தில் விபரீதம்.. 19 பயணிகளுடன் சென்ற விமானம்.. விழுந்து நொறுங்கி 18 பேர் பலி!

Jul 24, 2024,04:56 PM IST

காத்மாண்டு:   நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே 19 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளானதில் 18 பேர் பலியாகியுள்ளனர்.


நேபாளம் தலைநகர் காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து 19 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டது. காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியது. ஓடுதளத்தில் சென்ற போது ஓடுபாதை சறுக்கி விமானம் விபத்துக்குள்ளானது. ஒடுபாதையில் சறுக்கிய விமானம் சில மணி துளிகளில்  தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர  விபத்தில் 18 பேர் உடல் கருகி பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.




இந்த விபத்து குறித்து அறிந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த விமான விபத்தால் காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விமானத்தில் பணியாளர்கள் உட்பட 19 பேர் இருந்த நிலையில், அவர்களின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது.இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இந்நிலையில் , தீயை அணைத்து மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில், 18 பேர்களின் உடல்  கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. விமானி மணிஷ் ஷக்யா படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நேபாளத்தில் கடந்த 2010ம் ஆண்டு முதல் 12 விமான விபத்துக்கள் நடந்துள்ளன. நேபாள நாட்டில் விமான விபத்து என்பது அடிக்கடி நடைபெற்று வருகிறது. சராசரியாக ஆண்டுக்கு ஒரு விமான விபத்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்