பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய.. 1867 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்தல்..!

May 16, 2025,05:46 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 1867 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று அசத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னையில் உள்ள 14 மாநகராட்சி பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.


2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒன்பது லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் மொத்தம் 93.80 சதவிகித மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கமாக இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே 4.14 சதவீத பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


அரசு பள்ளிகள் சாதனை:




இந்த நிலையில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகள் என தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய 4917 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 1867 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


சென்னை மாநகராட்சி பள்ளிகள் அசத்தல்: 





10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியான தேர்ச்சியில் சென்னை 90.73% விகிதத்துடன் 34ம் இடத்தில் உள்ளது.  சைதாப்பேட்டை அரசுப் பள்ளி மாணவி தேஜஸ்வினி 500-க்கு 492 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். 


குறிப்பாக, புரசைவாக்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட 14 மாநகராட்சி பள்ளிகள் 100% பெற்று அசத்தியுள்ளனர். மேலும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி கண்ட நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் இதில் அடங்கும் என்பது நினைவிருக்கலாம்.


கடந்த ஆண்டு மாநகராட்சி பள்ளிகளில் 79 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக ஏழு சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


100% தேர்ச்சி பெற்ற சிறைவாசிகள்:



பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 237 சிறைவாசிகளில் 230 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 97.0 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  


குறிப்பாக மதுரை மத்திய சிறையில் தேர்வு எழுதிய சிறைவாசிகளில் 56 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் என அனைவரும் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

லட்சியக் கனவை முன்னின்று நிறைவேற்றப் போவது நீங்கதான்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து

news

அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நீங்க யாரும் ஹர்ட் ஆகாதீங்க.. தவெக தலைவர் விஜய்

news

கோவையை அதிர வைத்த.. மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 3 பேருக்கும் சாகும் வரை சிறைத் தண்டனை!

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026 விஐபி தொகுதிகள்...எந்த தொகுதியில் யார் போட்டியிட வாய்ப்பு?

news

இந்தியா உதவியது ஏன்?... வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

news

கேஸ் சிலிண்டர் விலை உயர்விற்கு திமுக தான் காரணம்...அண்ணாமலை சொன்ன காரணம்

news

ஈரான் போர் எப்பதான் முடியும்.. ஏன் இந்த சண்டை.. அடுத்து என்னதான் நடக்கும்?

news

வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு

news

ஓம்பிர்லாவை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்: மார்ச் 9 அன்று லோக்சபாவில் முக்கிய நகர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்