பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய.. 1867 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்தல்..!

May 16, 2025,05:46 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 1867 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று அசத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னையில் உள்ள 14 மாநகராட்சி பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.


2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒன்பது லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் மொத்தம் 93.80 சதவிகித மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கமாக இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே 4.14 சதவீத பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


அரசு பள்ளிகள் சாதனை:




இந்த நிலையில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகள் என தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய 4917 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 1867 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


சென்னை மாநகராட்சி பள்ளிகள் அசத்தல்: 





10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியான தேர்ச்சியில் சென்னை 90.73% விகிதத்துடன் 34ம் இடத்தில் உள்ளது.  சைதாப்பேட்டை அரசுப் பள்ளி மாணவி தேஜஸ்வினி 500-க்கு 492 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். 


குறிப்பாக, புரசைவாக்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட 14 மாநகராட்சி பள்ளிகள் 100% பெற்று அசத்தியுள்ளனர். மேலும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி கண்ட நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் இதில் அடங்கும் என்பது நினைவிருக்கலாம்.


கடந்த ஆண்டு மாநகராட்சி பள்ளிகளில் 79 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக ஏழு சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


100% தேர்ச்சி பெற்ற சிறைவாசிகள்:



பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 237 சிறைவாசிகளில் 230 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 97.0 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  


குறிப்பாக மதுரை மத்திய சிறையில் தேர்வு எழுதிய சிறைவாசிகளில் 56 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் என அனைவரும் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தெரியுமா...?

news

காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்

news

திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை

news

இலங்கையில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி: வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை

news

தமிழ்நாடு, புதுச்சேரி வேட்பாளர் நேர்காணலைத் தொடங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

கரூர் வழக்கு: டில்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்

news

ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையிலான போர்.. திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை

news

இஸ்ரேல் - அமெரிக்காவுக்கு பயங்கரமான பதிலடி காத்திருக்கு.. ஈரான் மீண்டும் எச்சரிக்கை

news

உனக்காக நான் பிறந்திருந்தால்..! (அவளின் அவன் (6)

அதிகம் பார்க்கும் செய்திகள்