ஒருத்தர் சுரேஷ் ராஜன், இன்னொருத்தர் மணி.. துரைங்க 2 பேரும்.. புல்லட் மட்டும்தான் திருடுவாங்களாம்!

May 02, 2023,10:50 AM IST
சென்னை: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திற்கு ஐபிஎல் போட்டி பார்க்க வருவோரின் பைக்குகளைத் திருடியதாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். விசேஷம் என்னவென்றால் இந்த இரண்டு பேரும் புல்லட்டுகளை மட்டும் குறி வைத்துத் திருடியுள்ளனர்.

இந்த இரண்டு திருடர்களிடமிருந்தும் திருடப்பட்ட 9 பைக்குகளைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ. 10 லட்சத்திற்கும் மேல் இருக்கும். 

தற்போது சென்னையில் ஐபிஎல் போட்டிகள் களை கட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹோம் கிரவுண்ட் என்பதால் இங்கு சென்னை அணி சம்பந்தப்பட்ட பல போட்டிகள் நடைபெறுகின்றன. இதனால் கிரிக்கெட் பார்க்க வருவோர் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதியில் அதிக அளவில் குவிகின்றனர். இதைப் பயன்படுத்தி திருடர்களும் கைவரிசை காட்ட ஆரம்பித்துள்ளனர்.



இப்படித்தான் சூளைமேட்டைச் சேர்ந்த கே.பாலசுந்தரம் என்பவர் ஞாயிற்றுக்கிழமை நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் இடையிலான போட்டியைப் பார்க்க வந்திருந்தார்.  ரயில்வே பார்டர் சாலையில் பைக்கை நிறுத்தி விட்டு மேட்ச் பார்க்கப் போய் விட்டார். மேட்ச் முடிந்து வந்து பார்த்தால் பைக்கைக் காணவில்லை. எல்லாப் பக்கத்திலும் தேடிப் பார்த்து விட்டு அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் பாலசுந்தரம்.

இதுபோன்ற பல திருட்டுப் புகார்கள் வருவதாக போலீஸார் அவரிடம் தெரிவித்தனர். குறிப்பாக ராயல் என்பீல்ட் புல்லட்டுகளைக் குறி வைத்து ஒரு கும்பல்திருடி வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தொடர் புகார்களைத் தொடர்ந்து போலீஸார் தனிப்படை அமைத்து திருடர்களைப் பிடிக்க களம் இறங்கினர். சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீஸார் நடத்திய விசாரணையில் 2 பேர் சிக்கினர். அவர்களது பெயர் திருவல்லிக்கேணி சுரேஷ்ராஜன் (55), பெரும்பாக்கம் மணி (40). இருவரும்தான் பைக் திருடர்கள் என்று தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்தனர்.

கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வருவோரின் பைக்குகளை ஸ்டேடியத்திற்குள் நிறுத்த போதுமான பார்க்கிங் வசதி இல்லை. இதனால் சாலையோரங்களில்தான் பைக்குகளை நிறுத்த வேண்டியுள்ளதாக ரசிகர்கள் புலம்புகிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்