ஒருத்தர் சுரேஷ் ராஜன், இன்னொருத்தர் மணி.. துரைங்க 2 பேரும்.. புல்லட் மட்டும்தான் திருடுவாங்களாம்!

May 02, 2023,10:50 AM IST
சென்னை: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திற்கு ஐபிஎல் போட்டி பார்க்க வருவோரின் பைக்குகளைத் திருடியதாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். விசேஷம் என்னவென்றால் இந்த இரண்டு பேரும் புல்லட்டுகளை மட்டும் குறி வைத்துத் திருடியுள்ளனர்.

இந்த இரண்டு திருடர்களிடமிருந்தும் திருடப்பட்ட 9 பைக்குகளைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ. 10 லட்சத்திற்கும் மேல் இருக்கும். 

தற்போது சென்னையில் ஐபிஎல் போட்டிகள் களை கட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹோம் கிரவுண்ட் என்பதால் இங்கு சென்னை அணி சம்பந்தப்பட்ட பல போட்டிகள் நடைபெறுகின்றன. இதனால் கிரிக்கெட் பார்க்க வருவோர் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதியில் அதிக அளவில் குவிகின்றனர். இதைப் பயன்படுத்தி திருடர்களும் கைவரிசை காட்ட ஆரம்பித்துள்ளனர்.



இப்படித்தான் சூளைமேட்டைச் சேர்ந்த கே.பாலசுந்தரம் என்பவர் ஞாயிற்றுக்கிழமை நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் இடையிலான போட்டியைப் பார்க்க வந்திருந்தார்.  ரயில்வே பார்டர் சாலையில் பைக்கை நிறுத்தி விட்டு மேட்ச் பார்க்கப் போய் விட்டார். மேட்ச் முடிந்து வந்து பார்த்தால் பைக்கைக் காணவில்லை. எல்லாப் பக்கத்திலும் தேடிப் பார்த்து விட்டு அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் பாலசுந்தரம்.

இதுபோன்ற பல திருட்டுப் புகார்கள் வருவதாக போலீஸார் அவரிடம் தெரிவித்தனர். குறிப்பாக ராயல் என்பீல்ட் புல்லட்டுகளைக் குறி வைத்து ஒரு கும்பல்திருடி வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தொடர் புகார்களைத் தொடர்ந்து போலீஸார் தனிப்படை அமைத்து திருடர்களைப் பிடிக்க களம் இறங்கினர். சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீஸார் நடத்திய விசாரணையில் 2 பேர் சிக்கினர். அவர்களது பெயர் திருவல்லிக்கேணி சுரேஷ்ராஜன் (55), பெரும்பாக்கம் மணி (40). இருவரும்தான் பைக் திருடர்கள் என்று தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்தனர்.

கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வருவோரின் பைக்குகளை ஸ்டேடியத்திற்குள் நிறுத்த போதுமான பார்க்கிங் வசதி இல்லை. இதனால் சாலையோரங்களில்தான் பைக்குகளை நிறுத்த வேண்டியுள்ளதாக ரசிகர்கள் புலம்புகிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்