மத்திய பிரதேசத்தில் 2 போர் விமானங்கள் நொறுங்கி விழுந்து விபத்து

Jan 28, 2023,12:01 PM IST
போபால் : மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு போர் விமானங்கள் பயிற்சியின் போது நொறுங்கி விழுந்து விபத்திற்குள்ளானது. 



மத்திய பிரதோசத்தின் குவாலியர் விமானப்படை மையத்தில் இருந்து புறப்பட்ட சுகோய் சு 30 மற்றும் மிரஜ் 2000 என்ற வகையை சேர்ந்த இரண்டு போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. இந்த இரு விமானங்களும் எதிர்பாராத விதமாக இன்று காலை கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகின. விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விபத்தில் விமானிகள் இருவரும் உயிர் தப்பி விட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த விபத்தில் வேறு யாராவது உயிரிழந்திருக்கிறார்களா என்பது பற்றி விசாரைண நடத்தப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தின் மொரினா பகுதியில் நடைபெற்ற இந்த விபத்தை, அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அதில் போர் விமானங்கள் வானில் இருந்து கீழே விழுந்து நொறுங்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன. 

விசாரைணயின் முடிவிலேயே உயிரிழப்புக்கள், விபத்திற்கான காரணம் போன்றவை தெரிய வரும் என சொல்லப்படுகிறது. மத்திய பிரதேச விமானப்படை பயிற்சி தளம் சார்பில் இந்த விபத்து குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரிலும் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

சிந்தனைச் சிதறல்.. உணவும் ஓய்வுமே உழைப்பிற்கான ஆற்றல் மூலம்!

news

tn result 2026 தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

news

மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!

news

May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'

news

உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!

news

ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்