மத்திய பிரதேசத்தில் 2 போர் விமானங்கள் நொறுங்கி விழுந்து விபத்து

Jan 28, 2023,12:01 PM IST
போபால் : மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு போர் விமானங்கள் பயிற்சியின் போது நொறுங்கி விழுந்து விபத்திற்குள்ளானது. 



மத்திய பிரதோசத்தின் குவாலியர் விமானப்படை மையத்தில் இருந்து புறப்பட்ட சுகோய் சு 30 மற்றும் மிரஜ் 2000 என்ற வகையை சேர்ந்த இரண்டு போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. இந்த இரு விமானங்களும் எதிர்பாராத விதமாக இன்று காலை கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகின. விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விபத்தில் விமானிகள் இருவரும் உயிர் தப்பி விட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த விபத்தில் வேறு யாராவது உயிரிழந்திருக்கிறார்களா என்பது பற்றி விசாரைண நடத்தப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தின் மொரினா பகுதியில் நடைபெற்ற இந்த விபத்தை, அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அதில் போர் விமானங்கள் வானில் இருந்து கீழே விழுந்து நொறுங்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன. 

விசாரைணயின் முடிவிலேயே உயிரிழப்புக்கள், விபத்திற்கான காரணம் போன்றவை தெரிய வரும் என சொல்லப்படுகிறது. மத்திய பிரதேச விமானப்படை பயிற்சி தளம் சார்பில் இந்த விபத்து குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரிலும் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்

news

தோசையம்மா தோசை.. ஹெல்த்தியான தோசை.. சுட்டுச் சுட்டுச் சாப்பிடுங்க.. சூப்பராக வாழுங்க!

news

அரங்கன் யாவுமே அறிந்தவனே!

news

அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது: ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் வாழ்த்து

news

தங்கம் விலையில் அதிரடி... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

அதிகம் பார்க்கும் செய்திகள்