டெல்லி: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக, டெல்லியில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. 2 நிமிடம் நீடித்த இந்த நில அதிர்வால் மக்கள் பெரும் அச்சமடைந்தனர். இருப்பினும் பெரிய அளவில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
நிலஅதிர்வைத் தொடர்ந்து மக்கள் வீடுகள், கட்டடங்களை விட்டு வெளியேறி தெருக்களில் கூடி நின்றனர். வீட்டுக்குள் பொருட்கள் ஒன்றன் மீது ஒன்றாக விழுந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
டெல்லி மட்டுமல்லாமல், வட இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. நேற்று இரவு ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 என்று பதிவானது. இதன் விளைவாகவே டெல்லியிலும் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கங்கள் சாதாரணமானவை. குறிப்பாக இந்துகுஷ் மலைப் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். இது ஈரோசியா மற்றும் இந்திய டெக்டானிக் தட்டுக்கள் சந்திக்கும் இடமாகும் என்பதால் நிலநடுக்கங்கள் சகஜம்.
பாகிஸ்தானிலும் பல்வேறு நகரங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டெல்லி நில அதிர்வுகள் 2 நிமிடம் நீடித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}