டெஹ்ரான்: ஈரானில் ஒரு கடைக்குள் புகுந்த நபர், 2 பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்தப் பெண்களின் தலையில் தயிரை ஊற்றி அநாகரீகமாக நடந்து கொண்டார்.
அந்த ஆசாமியைக் கைது செய்த போலீஸார், அந்த இரு பெண்களையும் சேர்த்தே கைது செய்துள்ளனர். பொது இடத்தில் தலைமுடியா ஹிஜாப் போட்டு மூடாமல் லூஸ் ஹேருடன் வந்ததால் அந்தப் பெண்களை போலீஸார் கைது செய்தனராம்.

அந்தக் கடைசியில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த கலாட்டா பதிவாகியுள்ளது. அந்தக் கடையில் இரண்டு பெண்கள் பொருட்கள் வாங்க நிற்கின்றனர். அப்போது ஒரு நபர் அங்கு வருகிறார். அந்தப் பெண்களுடன் ஏதோ கோபமாக பேசுகிறார். பின்னர் அருகில் இருந்த தயிர் டப்பாவை எடுத்து அதை இரண்டு பெண்களின் தலை மீதும் ஊற்றுகிறார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீஸார் அந்த நபரை கைது செய்தனர். கூடவே அந்த பெண்களையும் கைது செய்தனர். லூஸ் ஹேருடன் வந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனராம்.
ஈரானில் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும். அணியாமல் பொது இடங்களில் நடமாடினால் கடும் தண்டனை கிடைக்கும். இதை எதிர்த்துத்தான் ஈரானில் பெண்கள் மிகப் பெரிய போராட்டங்களை மேற்கொண்டனர் என்பது நினைவிருக்கலாம்.
சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு
"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
{{comments.comment}}