தயிரை எடுத்து 2 பெண்களின் தலையில் ஊற்றிய ஆசாமி.. போலீஸ் அடுத்து செய்த காரியம்!

Apr 02, 2023,04:11 PM IST

டெஹ்ரான்: ஈரானில் ஒரு கடைக்குள் புகுந்த நபர், 2 பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்தப் பெண்களின் தலையில் தயிரை ஊற்றி அநாகரீகமாக நடந்து  கொண்டார்.


அந்த ஆசாமியைக் கைது செய்த போலீஸார், அந்த இரு பெண்களையும் சேர்த்தே கைது செய்துள்ளனர். பொது இடத்தில் தலைமுடியா ஹிஜாப் போட்டு மூடாமல் லூஸ் ஹேருடன் வந்ததால் அந்தப் பெண்களை போலீஸார் கைது செய்தனராம்.


அந்தக் கடைசியில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த கலாட்டா பதிவாகியுள்ளது. அந்தக் கடையில் இரண்டு பெண்கள் பொருட்கள் வாங்க நிற்கின்றனர். அப்போது ஒரு நபர் அங்கு வருகிறார். அந்தப் பெண்களுடன் ஏதோ கோபமாக பேசுகிறார். பின்னர் அருகில் இருந்த தயிர் டப்பாவை எடுத்து அதை இரண்டு பெண்களின் தலை மீதும் ஊற்றுகிறார்.


இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீஸார் அந்த நபரை கைது செய்தனர். கூடவே அந்த பெண்களையும் கைது செய்தனர். லூஸ் ஹேருடன் வந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனராம்.


ஈரானில் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும். அணியாமல் பொது இடங்களில் நடமாடினால் கடும் தண்டனை கிடைக்கும். இதை எதிர்த்துத்தான் ஈரானில் பெண்கள் மிகப் பெரிய போராட்டங்களை மேற்கொண்டனர் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்