டெல்லி: 2024 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மேக்ரான் இந்த விழாவில் பங்கேற்றால், இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கும் 6வது பிரான்ஸ் தலைவராக அவர் உருவெடுப்பார். 1950ம் ஆண்டு இந்தியா குடியரசு நாடானது. அன்று முதல் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படட்டு வருகிறது.
குடியரசு தின விழாவுக்கு வெளிநாட்டுத் தலைவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து கெளரவிப்பது நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக வருமாறு பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளுடன், குறிப்பாக பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவின் உறவு சமீப ஆண்டுகளில் சிறப்பாக மாறியுள்ளது. மேக்ரான் வருகை இந்த உறவை மேலும் வலுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் பாரீஸில் நடைபெற்ற பாஸ்டில் தின பேரணி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டது நினைவிருக்கலாம்.
பிரான்ஸிடமிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளது என்பது நினைவிருக்கலாம். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவும் இதுவரை இல்லாத அளவுக்கு இறுக்கமாகியுள்ளது. மேக்ரானின் இந்திய வருகையின்போது பல்வேறு ஒப்பந்தங்களும் கூட கையெழுத்தாக வாய்ப்புள்ளது.
1976ம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஜேக்கஸ் சிராக் சிறப்ப விருந்தினராக கலந்து கொண்டார். அவர்தான் முதல் பிரெஞ்சு தலைவர் ஆவார். அதன் பின்னர், 1980ல் வெலரி ஜிஸ்கார்ட் டி எஸ்டாய்ங்க், 1998ல் மீண்டும் ஜேக்கஸ் சிராக், 2008ல் நிக்கோலஸ், சர்கோஸி, 2016ல் பிரான்காய்ஸ் ஹாலன்டே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்குத்தான் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் பிடனால் கலந்து கொள்ள முடியாத நிலை இருப்பதாக அமெரிக்கா கூறி விட்டது. இதையடுத்தே பிரான்ஸ் அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}