2024 குடியரசு தின விழா.. "நீங்கதான் சிறப்பு விருந்தினர்".. பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு அழைப்பு!

Dec 22, 2023,05:17 PM IST

டெல்லி: 2024 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.


மேக்ரான் இந்த விழாவில் பங்கேற்றால், இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கும் 6வது பிரான்ஸ் தலைவராக அவர் உருவெடுப்பார். 1950ம் ஆண்டு இந்தியா குடியரசு நாடானது. அன்று முதல் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படட்டு வருகிறது.


குடியரசு தின விழாவுக்கு வெளிநாட்டுத்  தலைவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து கெளரவிப்பது நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக வருமாறு பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.




உலக நாடுகளுடன், குறிப்பாக பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவின் உறவு சமீப ஆண்டுகளில் சிறப்பாக மாறியுள்ளது. மேக்ரான் வருகை இந்த உறவை மேலும் வலுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த ஆண்டு தொடக்கத்தில் பாரீஸில் நடைபெற்ற பாஸ்டில் தின பேரணி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டது நினைவிருக்கலாம்.


பிரான்ஸிடமிருந்து  ரபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளது என்பது நினைவிருக்கலாம். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவும் இதுவரை இல்லாத அளவுக்கு இறுக்கமாகியுள்ளது.  மேக்ரானின் இந்திய வருகையின்போது பல்வேறு ஒப்பந்தங்களும் கூட கையெழுத்தாக வாய்ப்புள்ளது.


1976ம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஜேக்கஸ் சிராக் சிறப்ப விருந்தினராக கலந்து கொண்டார். அவர்தான் முதல் பிரெஞ்சு தலைவர் ஆவார். அதன் பின்னர், 1980ல் வெலரி ஜிஸ்கார்ட் டி எஸ்டாய்ங்க், 1998ல் மீண்டும் ஜேக்கஸ் சிராக், 2008ல் நிக்கோலஸ், சர்கோஸி, 2016ல் பிரான்காய்ஸ் ஹாலன்டே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.


முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்குத்தான் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் பிடனால் கலந்து கொள்ள முடியாத நிலை இருப்பதாக அமெரிக்கா கூறி விட்டது. இதையடுத்தே பிரான்ஸ் அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்