திடீரென ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில்.. சிக்கி மாயமான 23 ராணுவ வீரர்கள்!

Oct 04, 2023,11:27 AM IST
கேங்டாக்: வடக்கு சிக்கிம் மாநிலத்தில் உள்ள டீஸ்டா ஆற்றில் திடீரென வெள்ள பெருக்கு ஏற்பட்டது. அதில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிக்கிம் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் மேக வெடிப்பு காரணமாக நேற்று முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. லச்சன் பள்ளத்தாக்கில் டீஸ்டா ஆற்றில் நீரின்வரத்து  அபாயகரமான அளவில் அதிகரித்தது. இதனால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிக மழையின் காரணமாக இப்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

வடக்கு சிக்கிமில் உள்ள சுங்தாங் அணையில் நீர்மட்டம் உயர்ந்ததால் தண்ணீர் திறக்கப்பட்டது. இப்பகுதியில் ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர். டீஸ்டா ஆற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி 2 ராணுவ வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அதில் 23 ராணுவ வீரர்கள் இருந்துள்ளனர். மாயமான  ராணுவ வீரர்களை தீவிரமாக தேடும் பணி நடந்து வருகிறது.

சிக்கிமில் பெய்து வரும் கனமழை எதிரொலியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் இன்னும் மூன்று ,நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

விஜய்யை அப்பாவாக.. அண்ணனாக.. எங்கள் உயிராக நினைக்கிறோம்.. MLA வேல்முருகனுக்கு பதில் அளித்த மாணவி!

news

அதிசயம் ஆனால் உண்மை... நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்கு தெரியவில்லை: விஷ்வாஸ் குமார் ரமேஷ்!

news

ஜூலை 25 முதல் 100 நாள்.. மக்கள் உரிமை மீட்புப் பயணம்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

news

என் மூச்சுக் காற்று இருக்கும் வரை நானே பாமக தலைவர்: டாக்டர் ராமதாஸ் திட்டவட்டம்!

news

காமராஜர், இளைய காமராஜர்னு சொல்லாதீங்க - தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்!

news

சென்னை கோயம்பேடு சந்தை: இன்றைய காய்கறிகளின் விலை எவ்வளவு தெரியுமா?

news

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை...ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1560 உயர்வு!

news

ஈரானின் அணு சக்தி நிலையங்களைக் குறி வைத்து அதிரடி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. பெரும் பதட்டம்

news

வெள்ளிக்கிழமைகளில்.. வைபவ லட்சுமி பூஜை வழிபாடு மிகவும் சிறந்தது!

அதிகம் பார்க்கும் செய்திகள்