திடீரென ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில்.. சிக்கி மாயமான 23 ராணுவ வீரர்கள்!

Oct 04, 2023,11:27 AM IST
கேங்டாக்: வடக்கு சிக்கிம் மாநிலத்தில் உள்ள டீஸ்டா ஆற்றில் திடீரென வெள்ள பெருக்கு ஏற்பட்டது. அதில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிக்கிம் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் மேக வெடிப்பு காரணமாக நேற்று முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. லச்சன் பள்ளத்தாக்கில் டீஸ்டா ஆற்றில் நீரின்வரத்து  அபாயகரமான அளவில் அதிகரித்தது. இதனால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிக மழையின் காரணமாக இப்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

வடக்கு சிக்கிமில் உள்ள சுங்தாங் அணையில் நீர்மட்டம் உயர்ந்ததால் தண்ணீர் திறக்கப்பட்டது. இப்பகுதியில் ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர். டீஸ்டா ஆற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி 2 ராணுவ வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அதில் 23 ராணுவ வீரர்கள் இருந்துள்ளனர். மாயமான  ராணுவ வீரர்களை தீவிரமாக தேடும் பணி நடந்து வருகிறது.

சிக்கிமில் பெய்து வரும் கனமழை எதிரொலியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் இன்னும் மூன்று ,நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ADMK candidates: 23 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடியில் மீண்டும் பழனிச்சாமி போட்டி!

news

அதிமுக 169 இடங்களில் போட்டி...கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 65 தொகுதிகள் விபரம்

news

கோவை வடக்கு அண்ணாமலையா.. கோவை தெற்கிலிருந்து திருப்பூருக்கு மாறுகிறாரா வானதி?

news

தளி முதல் ராசிபுரம் தனி வரை.. பாஜக போட்டியிடப் போகும் தொகுதிகள் இவைதான்.. Full list

news

TN Elections: 2021 சட்டசபைத் தேர்தலில் யார் யார் எத்தனை இடங்களில் போட்டி.. 2026ல் என்ன நிலைமை?

news

தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு கமல்ஹாசன் தள்ளப்பட்டுள்ளார்.. திருமாவளவன்

news

ரூ.50,000-க்கு மேல் பணம் கொண்டு செல்வோருக்கு முக்கிய அறிவுறுத்தல்

news

தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டியில்லை...வேல்முருகன் அதிரடி அறிவிப்பு

news

பேளூர் தான் தோன்றீஸ்வரர் கோவில் திருக்குடமுழக்கு விழா

அதிகம் பார்க்கும் செய்திகள்