பெங்களூரு: கர்நாடக பாஜக எம்.பி.மகன் மீது 24 வயது பெண் திருமண மோசடி புகார் செய்துள்ளார்.
தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, மைசூர் ஹோட்டலில் ரூம் போட்டு, தன்னுடன் உறவு கொண்டு விட்டு பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக அந்தப் பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்தவர் ஒய். தேவேந்திரப்பா. இவர் பாஜக எம்.பி. ஆவா். இவரது மகன்தான் ரங்கநாத். 42 வயதான ரங்கநாத், கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர். இவர் மீது 24 வயது பெண் பாலியல் புகார் செய்துள்ளார்.
அந்தப் புகாரில், தான் கல்லூரி பேராசிரியராக பணிபுரிவதாக கூறி தன்னுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டார் ரங்கநாத். இருவருக்கும் பொதுவான நண்பர் மூலம் தான் ரங்கநாத் எனக்கு அறிமுகமானார். பின்னர் இருவரும் நெருங்கிப் பழகினோம். இது காதலானது. உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று அவர் கூறியதால் நானும் நம்பினேன், எனது பெற்றோரையும் அவர் நம்ப வைத்து விட்டார்.

இந்த நிலையில் மைசூருக்கு ஒரு முறை போனபோது அங்கு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கினோம். அப்போது குடிபோதையில் இருந்த ரங்கநாத் என்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டார். ஆனால் அதன் பிறகு என்னை தவிர்க்க ஆரம்பித்தார். கேட்டதற்கு வயது வித்தியாசம் இருக்கிறது, திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி விட்டார். இதுகுறித்து எம்.பி. தேவேந்திரப்பாவிடம் புகார் கூறியும் பலன் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்தப் புகாரின் பேரில், போலீஸார் தற்போது ரங்கநாத் மீது ஐபிசி 417, 420, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி, அசாம், கேரளா சட்டசபை தேர்தல் 2026: இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது
சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை
தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை
இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்
Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!
கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?
சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!
Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!
{{comments.comment}}