9 வருடத்திற்கு முன்பு பலாத்காரம்.. பாஜக எம்எல்ஏவுக்கு 25 வருட சிறை.. தகுதி நீக்கம் செய்யப்பட்டார்!

Dec 23, 2023,06:19 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராம்துலால் கான்ட் என்பவருக்கு, 9 ஆண்டுக்கு முன்பு தொடரப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கில் 25 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சட்டசபையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.


மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டாலே சட்டசபை அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி இழந்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தகுதி நீக்கம் செய்யப்படுவோர் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிடவும் முடியாது.


சோன்பத்ரா என்ற இடத்தில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கியவர் கான்ட். கடந்த 9 வருடமாக விசாரணை நடந்த நிலையில் தற்போது அவருக்கு 25 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  இதுதவிர ரூ. 10 லட்சம் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.




பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு இப்போது திருமணமாகி அவருக்கு குழந்தையும் உள்ளது. இந்தப் பெண்ணிடம் அந்த அபராதத் தொகையை செலுத்த கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 


கடந்த சில ஆண்டுகளில் உ.பி. சட்டசபையில் பல உறுப்பினர்கள் தண்டனை பெற்று இப்படி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு சமாஜ்வாடி எம்எல்ஏ ஆசம்கான், பாஜக எம்எல்ஏ விக்ரம் சிங் சைனி ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதே போல 2020ம் ஆண்டு குல்தீப் சிங் செங்கார் என்ற எம்எல்ஏ பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்று தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.


இந்த ஆண்டு ஆசம் கானின் மகன் அப்துல்லா ஆசம் கான் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.  தற்போது இன்னொரு பாஜக எம்எல்ஏ தகுதிநீக்கம் ஆகியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

news

கட்ட பஞ்சாயத்து செய்யவா மக்கள் ஓட்டு போட்டார்கள்? பூவை ஜெகன் மூர்த்திக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

news

ஐபிஎல் லைட்டை நாங்கதான் ஹேக் பண்ணோம் தெரியுமா.. காமெடி செய்த பாகிஸ்தான் அமைச்சர்!

news

ரஜினிகாந்த், விஜயகாந்தை விட விஜய் என்ன பெரிய ஆளா? தவாக தலைவர் வேல்முருகன்

news

2026ல் தொடங்குகிறது சென்சஸ் கணக்கெடுப்பு.. முதலில் லடாக், காஷ்மீரில் தொடங்கும்.. மத்திய அரசு

news

பாமகவின் இரு தலைவர்களும் பேச வேண்டும்: பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி

news

தமிழ்நாட்டை கத்தி.. அரிவாள்.. துப்பாக்கி பாதைக்கு கொண்டு சென்றுள்ள திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி

news

இஸ்ரேல் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால்.. எங்களுக்காக பாகிஸ்தான் பதில் தரும்.. ஈரான்

news

இஸ்ரேலுக்கு முழுமையான பதிலடி தருவோம்.. அதுவரைக்கும் போர் நிறுத்தம் கிடையாது.. ஈரான் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்