டெல்லி: போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, நாடு முழுவதும் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த திங்கட்கிழமை உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் இரங்கலை பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி நாடு முழுவதும் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கபடும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை, ஏப்ரல் 21, 2025 அன்று காலமானார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்தியா முழுவதும் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி, இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இறுதிச் சடங்கு நாளில், ஒரு நாள் மாநிலம் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும். இந்த நாட்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும், அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுக்கு மகன் பிறந்த பிறகுதான்.. பும்ரா பெரிய ஆளானார்.. மனைவி சஞ்சனா கணேசன் நெகிழ்ச்சி!
திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்
விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை... கூட்டணி குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்!
விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடனா?: சீமான் கண்டனம்
முருக பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி: ஜூன் 22ல் மதுரையில் பிரம்மாண்டமாக முருகன் பக்தர்கள் மாநாடு!
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம்.. குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிடுவோம்: முதலமைச்சர் முக ஸ்டாலின்
பட புரோமோஷனுக்காக புடவையில் வந்த கஜோல்... விலையை கேட்டால் அப்டியே மயங்கிருவீங்க!
கீரையின் அரசன் முருங்கைக் கீரையும்.. தட்டைப் பயறும் கை கோர்த்தால்.. செம ரெசிபி!
தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை திடீர் உயர்வு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}