தண்டவாளத்தில் நடந்து வந்த 3 மாற்றுத்திறனாளி சிறுவர்கள்.. ரயில் மோதி பலி!

Oct 24, 2023,03:25 PM IST

சென்னை:  சென்னை தாம்பரம் அருகே ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில் டிராக்கை கடக்கும்போது ரயில் மோதி 3 மாற்றுத்திறானாளி சிறார்கள் மரணம் அடைந்தனர்.


கர்நாடகவை சேர்ந்த  சுரேஷ் (15), ரவி (12), மஞ்சுநாத் (11)  ஆகிய 3 பேரும் மாற்றுத்திறனாளிகள். சகோதரர்களான சுரேஷ், ரவி, இருவருக்கும் காது கேட்காது. உறவினரான மஞ்சுநாத்திற்கு வாய் பேசவராது. இவர்கள் 3 வரும் செங்கல்பட்டு, ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள இவர்களது பெற்றோரை காண வந்தனர்.  

பெற்றோர்கள் இருவரும் ஊரப்பாக்கம் பகுதியில் தங்கி கூலி வேலை பார்த்து வருகின்றனர். 




3 வரும் கர்நாடகாவில் பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகின்றனர். பெற்றோரை காண வந்த 3 சிறுவர்களும் அருகில் இருந்த தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து வேகமாக வந்த ரயில் இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 3பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரித்தனர். 3 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துமனைக்கு அனுப்பினர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

அதிகம் பார்க்கும் செய்திகள்