சென்னை: சென்னை தாம்பரம் அருகே ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில் டிராக்கை கடக்கும்போது ரயில் மோதி 3 மாற்றுத்திறானாளி சிறார்கள் மரணம் அடைந்தனர்.
கர்நாடகவை சேர்ந்த சுரேஷ் (15), ரவி (12), மஞ்சுநாத் (11) ஆகிய 3 பேரும் மாற்றுத்திறனாளிகள். சகோதரர்களான சுரேஷ், ரவி, இருவருக்கும் காது கேட்காது. உறவினரான மஞ்சுநாத்திற்கு வாய் பேசவராது. இவர்கள் 3 வரும் செங்கல்பட்டு, ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள இவர்களது பெற்றோரை காண வந்தனர்.
பெற்றோர்கள் இருவரும் ஊரப்பாக்கம் பகுதியில் தங்கி கூலி வேலை பார்த்து வருகின்றனர்.

3 வரும் கர்நாடகாவில் பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகின்றனர். பெற்றோரை காண வந்த 3 சிறுவர்களும் அருகில் இருந்த தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து வேகமாக வந்த ரயில் இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 3பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரித்தனர். 3 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துமனைக்கு அனுப்பினர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}