சென்னை: சென்னை தாம்பரம் அருகே ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில் டிராக்கை கடக்கும்போது ரயில் மோதி 3 மாற்றுத்திறானாளி சிறார்கள் மரணம் அடைந்தனர்.
கர்நாடகவை சேர்ந்த சுரேஷ் (15), ரவி (12), மஞ்சுநாத் (11) ஆகிய 3 பேரும் மாற்றுத்திறனாளிகள். சகோதரர்களான சுரேஷ், ரவி, இருவருக்கும் காது கேட்காது. உறவினரான மஞ்சுநாத்திற்கு வாய் பேசவராது. இவர்கள் 3 வரும் செங்கல்பட்டு, ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள இவர்களது பெற்றோரை காண வந்தனர்.
பெற்றோர்கள் இருவரும் ஊரப்பாக்கம் பகுதியில் தங்கி கூலி வேலை பார்த்து வருகின்றனர்.
3 வரும் கர்நாடகாவில் பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகின்றனர். பெற்றோரை காண வந்த 3 சிறுவர்களும் அருகில் இருந்த தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து வேகமாக வந்த ரயில் இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 3பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரித்தனர். 3 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துமனைக்கு அனுப்பினர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
{{comments.comment}}