தண்டவாளத்தில் நடந்து வந்த 3 மாற்றுத்திறனாளி சிறுவர்கள்.. ரயில் மோதி பலி!

Oct 24, 2023,03:25 PM IST

சென்னை:  சென்னை தாம்பரம் அருகே ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில் டிராக்கை கடக்கும்போது ரயில் மோதி 3 மாற்றுத்திறானாளி சிறார்கள் மரணம் அடைந்தனர்.


கர்நாடகவை சேர்ந்த  சுரேஷ் (15), ரவி (12), மஞ்சுநாத் (11)  ஆகிய 3 பேரும் மாற்றுத்திறனாளிகள். சகோதரர்களான சுரேஷ், ரவி, இருவருக்கும் காது கேட்காது. உறவினரான மஞ்சுநாத்திற்கு வாய் பேசவராது. இவர்கள் 3 வரும் செங்கல்பட்டு, ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள இவர்களது பெற்றோரை காண வந்தனர்.  

பெற்றோர்கள் இருவரும் ஊரப்பாக்கம் பகுதியில் தங்கி கூலி வேலை பார்த்து வருகின்றனர். 




3 வரும் கர்நாடகாவில் பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகின்றனர். பெற்றோரை காண வந்த 3 சிறுவர்களும் அருகில் இருந்த தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து வேகமாக வந்த ரயில் இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 3பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரித்தனர். 3 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துமனைக்கு அனுப்பினர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்