தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் சேலம்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
2 லாரிகள், 3 கார்கள் அடுத்தடுத்து மோதி தீப்பிடித்து எரிந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களில் 2 லாரிகள், 2 கார்கள் முழுமையாக எரிந்து சாம்பலாகின. தொப்பூர் கணவாயில் அடிக்கடி சாலை விபத்து நடப்பது தொடர் கதையாகி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரியிலிருந்து நெல் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சேலம் நோக்கி போய்க் கொண்டிருந்தது. அப்போது தொப்பூர் கணவாய் இரட்டைப் பாலத்தின் மீது போய்க் கொண்டிருந்தபோது, அந்த லாரி, தனக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த இன்னொரு லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 கார்களும் சிக்கிக் கொண்டன.

மோதிய வேகத்தில் ஒரு காரும், லாரியும் பாலத்திற்கு கீழே போய் விழுந்தன. விபத்தில் சிக்கி ஒரு லாரியும், 2 கார்களும் முழுமையாக தீப்பிடித்து எரிந்தன. நெல் ஏற்றி வந்த லாரி முழுமையாக தீப்பிடித்து எரிந்து விட்டது.
தீயணைப்பு வாகனங்களும், ஆம்புலன்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் நசுங்கிப் போன உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விவரமும் இதுவரை தெரியவில்லை.
நெல் ஏற்றி வந்த லாரி மோதி விபத்தை ஏற்படுத்தியது தொடர்பான சிசிடிவி கேமராக் காட்சிகள் பதற வைப்பதாக உள்ளன. முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை நெல் ஏற்றி வந்த லாரி வேகமாக முந்த முயன்றதால்தான் இந்த விபத்து நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!
சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)
ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)
கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க
வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!
தாயன்பு !
All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!
{{comments.comment}}