Accident: தொப்பூர் கணவாயில் பயங்கரம்.. 2 லாரிகள், 3 கார்கள் மோதி பெரும் விபத்து.. 3 பேர் பலி

Jan 24, 2024,07:27 PM IST

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் சேலம்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.


2 லாரிகள், 3 கார்கள் அடுத்தடுத்து மோதி தீப்பிடித்து எரிந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களில் 2 லாரிகள், 2 கார்கள் முழுமையாக எரிந்து சாம்பலாகின. தொப்பூர் கணவாயில் அடிக்கடி சாலை விபத்து நடப்பது தொடர் கதையாகி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.


தர்மபுரியிலிருந்து நெல் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சேலம் நோக்கி போய்க் கொண்டிருந்தது. அப்போது தொப்பூர் கணவாய் இரட்டைப் பாலத்தின் மீது போய்க் கொண்டிருந்தபோது, அந்த லாரி, தனக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த இன்னொரு லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 கார்களும் சிக்கிக் கொண்டன.




மோதிய வேகத்தில் ஒரு காரும், லாரியும் பாலத்திற்கு கீழே போய் விழுந்தன. விபத்தில் சிக்கி ஒரு லாரியும், 2 கார்களும் முழுமையாக தீப்பிடித்து எரிந்தன. நெல் ஏற்றி வந்த லாரி முழுமையாக தீப்பிடித்து எரிந்து விட்டது. 


தீயணைப்பு வாகனங்களும், ஆம்புலன்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் நசுங்கிப் போன உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விவரமும் இதுவரை தெரியவில்லை.


நெல் ஏற்றி வந்த லாரி மோதி விபத்தை ஏற்படுத்தியது தொடர்பான சிசிடிவி கேமராக் காட்சிகள் பதற வைப்பதாக உள்ளன. முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை நெல் ஏற்றி வந்த லாரி வேகமாக முந்த முயன்றதால்தான் இந்த விபத்து நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்