Accident: தொப்பூர் கணவாயில் பயங்கரம்.. 2 லாரிகள், 3 கார்கள் மோதி பெரும் விபத்து.. 3 பேர் பலி

Jan 24, 2024,07:27 PM IST

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் சேலம்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.


2 லாரிகள், 3 கார்கள் அடுத்தடுத்து மோதி தீப்பிடித்து எரிந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களில் 2 லாரிகள், 2 கார்கள் முழுமையாக எரிந்து சாம்பலாகின. தொப்பூர் கணவாயில் அடிக்கடி சாலை விபத்து நடப்பது தொடர் கதையாகி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.


தர்மபுரியிலிருந்து நெல் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சேலம் நோக்கி போய்க் கொண்டிருந்தது. அப்போது தொப்பூர் கணவாய் இரட்டைப் பாலத்தின் மீது போய்க் கொண்டிருந்தபோது, அந்த லாரி, தனக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த இன்னொரு லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 கார்களும் சிக்கிக் கொண்டன.




மோதிய வேகத்தில் ஒரு காரும், லாரியும் பாலத்திற்கு கீழே போய் விழுந்தன. விபத்தில் சிக்கி ஒரு லாரியும், 2 கார்களும் முழுமையாக தீப்பிடித்து எரிந்தன. நெல் ஏற்றி வந்த லாரி முழுமையாக தீப்பிடித்து எரிந்து விட்டது. 


தீயணைப்பு வாகனங்களும், ஆம்புலன்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் நசுங்கிப் போன உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விவரமும் இதுவரை தெரியவில்லை.


நெல் ஏற்றி வந்த லாரி மோதி விபத்தை ஏற்படுத்தியது தொடர்பான சிசிடிவி கேமராக் காட்சிகள் பதற வைப்பதாக உள்ளன. முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை நெல் ஏற்றி வந்த லாரி வேகமாக முந்த முயன்றதால்தான் இந்த விபத்து நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை

news

தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை

news

இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?

news

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்

news

Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!

news

கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?

news

சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!

news

Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!

news

இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is

அதிகம் பார்க்கும் செய்திகள்