இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு இந்து கோவில்கள் மீது துப்பாக்கி ஏந்திய கும்பல் தாக்குதல் நடத்தியதுடன் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 30 இந்துக்களை சிறைபிடித்து வைத்திருந்ததை பாகிஸ்தான் மனித உரிமைகள் கழகம் உறுதி செய்துள்ளது.
பாகிஸ்தானில் இந்துக்கள் மீதும், இந்து கோவில்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவது சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் "ஷீமா ஹைதரின் காதல் விவகாரம்" தான்.
பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணான ஷீமா ஹைதர் என்பவர், நான்கு குழந்தைகளுக்கு தாய். இவருக்கு இந்தியாவை சேர்ந்த சச்சின் மீனா என்ற 22 வயது இளைஞர் மீது காதல் ஏற்பட்டது. இதனால் தனது குடும்பம், குழந்தைகளை விட்டு விட்டு இந்தியா வந்த ஷீமா ஹைதர், நொய்டாவில் தனியாக வீடு எடுத்து தனது காதலருடன் வசிக்க துவங்கினார்.
ஆனால் சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் வந்ததாக ஷீமா கைது செய்யப்பட்டார். இருந்தாலும் காதலனை விட்டு பிரிந்து செல்ல மறுத்த ஷீமா, தனக்கு இந்திய குடியுரிமை அளிக்க கேட்டு சட்ட போராட்டம் நடத்தி வந்தார். இந்த விவகாரம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பாகிஸ்தானில் உள்ள இந்துக் கோவில்கள் பலவும் தாக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் கராச்சி மற்றும் சிந்து பகுதியில் உள்ள இரண்டு இந்து கோவில்கள் தாக்கப்பட்டுள்ளன. இதில் சிந்து பகுதியில் தான் 30 இந்துக்களை துப்பாக்கி முனையில் சிறைபிடித்து வைத்திருப்பது தெரிய வந்தது. விவரம் அறிந்து போலீசாரும், மனித உரிமைகள் கழகத்தினரும் அங்கு சென்ற போது, ஆயுதம் ஏந்திய அந்த கும்பல் தப்பி ஓடி விட்டதாக சொல்லப்படுகிறது.
உங்களுடன் ஸ்டாலின்.. முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை.. சி.வி. சண்முகத்திற்கும் Fine!
அன்புமணி அறிவித்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி டாக்டர் ராமதாஸ் வழக்கு
ஆகஸ்ட் 9ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
சிறப்பு எஸ்.ஐ., கொலை... எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை கண்டனம்!
ஆகஸ்ட் 17ம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட இது தான் காரணமா?.. டாக்டர் ராமதாசின் அடுத்த அதிரடி
உடுமலை அருகே எஸ்ஐ சண்முகவேல் வெட்டிக்கொலை: 5 தனிப்படைகள் அமைப்பு
ஓபிஎஸ் எக்ஸ் பக்கத்தைக் கவனித்தீரா.. 2 நாட்களாக ஒருவரை மட்டுமே வறுக்கிறார்.. யாரைத் தெரியுமா?
தவெக மாநில மாநாடு.. புதிய தேதியை அறிவித்த விஜய்.. எப்போது கிடைக்கும் அனுமதி?
ராமதாஸ் போன் ஒட்டுக்கேட்பு.. போலீசில் புகார்.. அதிரடி காட்டும் தைலாபுரம்.. அடுத்து என்ன நடக்கும்?
{{comments.comment}}