பாகிஸ்தானில் 30 இந்துக்கள் சிறைபிடிப்பு... காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

Jul 17, 2023,04:57 PM IST

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு இந்து கோவில்கள் மீது துப்பாக்கி ஏந்திய கும்பல் தாக்குதல் நடத்தியதுடன் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 30 இந்துக்களை சிறைபிடித்து வைத்திருந்ததை பாகிஸ்தான் மனித உரிமைகள் கழகம் உறுதி செய்துள்ளது. 


பாகிஸ்தானில் இந்துக்கள் மீதும், இந்து கோவில்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவது சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் "ஷீமா ஹைதரின் காதல் விவகாரம்" தான். 


பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணான ஷீமா ஹைதர் என்பவர், நான்கு குழந்தைகளுக்கு தாய். இவருக்கு இந்தியாவை சேர்ந்த சச்சின் மீனா என்ற 22 வயது இளைஞர் மீது காதல் ஏற்பட்டது. இதனால் தனது குடும்பம், குழந்தைகளை விட்டு விட்டு இந்தியா வந்த ஷீமா ஹைதர், நொய்டாவில் தனியாக வீடு எடுத்து தனது காதலருடன் வசிக்க துவங்கினார்.


ஆனால் சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் வந்ததாக ஷீமா கைது செய்யப்பட்டார். இருந்தாலும் காதலனை விட்டு பிரிந்து செல்ல மறுத்த ஷீமா, தனக்கு இந்திய குடியுரிமை அளிக்க கேட்டு சட்ட போராட்டம் நடத்தி வந்தார். இந்த விவகாரம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பாகிஸ்தானில் உள்ள இந்துக் கோவில்கள் பலவும் தாக்கப்பட்டு வருகின்றன.


கடந்த 24 மணி நேரத்தில் கராச்சி மற்றும் சிந்து பகுதியில் உள்ள இரண்டு இந்து கோவில்கள் தாக்கப்பட்டுள்ளன. இதில் சிந்து பகுதியில் தான் 30 இந்துக்களை துப்பாக்கி முனையில் சிறைபிடித்து வைத்திருப்பது தெரிய வந்தது. விவரம் அறிந்து போலீசாரும், மனித உரிமைகள் கழகத்தினரும் அங்கு சென்ற போது, ஆயுதம் ஏந்திய அந்த கும்பல் தப்பி ஓடி விட்டதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

குடியரசுத் தலைவருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு.. நாளை டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்!

news

Operation Sindoor.. பாகிஸ்தானை எப்படி தாக்கினோம்.. விளக்கிய பெண் அதிகாரிகள்.. யார் இவர்கள்?

news

4 years of DMK Govt: திராவிட மாடல் ஆட்சியே விடியல் தரும் ஆட்சி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

இந்திய தாக்குதலில்.. எங்க குடும்பத்துல 10 பேரு செத்துப் போயிட்டாங்க.. மசூத் அஸார் அலறல்!

news

மங்கள மீனாட்சிக்கு மதுரையில் திருக்கல்யாணம்.. பெண் குழந்தைகளுக்கு வைக்க 31 தமிழ்ப் பெயர்கள்!

news

ராணுவத்திற்கு ராயல் சல்யூட் அடித்த விஜய்.. இதுதான் இந்தியாவின் முகம்.. பாராட்டிய சிவகார்த்திகேயன்!

news

இந்தியாவின் 25 நிமிடத் தாக்குதல்.. கொல்லப்பட்ட 70 பயங்கரவாதிகள்.. திரில் நடவடிக்கை!

news

IPL வரலாற்றில் சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை.. 3வது முறையாக.. 500+ ரன்களைக் கடந்து புதிய வரலாறு!

news

சென்னை சூப்பர் கிங்ஸுடன் இன்று மோதல்.. பெரும் வெற்றியைப் பெறும் மும்முரத்தில் KKR!

அதிகம் பார்க்கும் செய்திகள்