சென்னை : காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் அக்கட்சியை சேர்ந்த 30 உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளது அக்கட்சிக்குள் புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று அக்கட்சியின் அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் நடைபெற்றது. வரும் தமிழக சட்டசபை தேர்தலில் எவ்வாறு பணியாற்றுவது, எந்தெந்த தொகுதிகளை பெறுவது, திமுக தலைமையிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கலாமா வேண்டாமா என்பது தொடர்பான பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வதற்காக இந்த செயற்குழு கூட்டப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மொத்தம் 91 உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்த நிலையில் 30 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வந்த காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூரும் இந்த செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்களால் காங்கிரஸ் பிளவுபட்டு கிடப்பது அம்பலமாகி உள்ளது.
இதனால் தமிழக சட்டசபை தேர்தலில் யாருடைய கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரசிற்கு எத்தனை தொகுதிகள், கூட்டணியில் தொடர காங்கிரஸ் திமுக தலைமையிடம் ஏதாவது நிபந்தனை வைக்குமா, அப்படி வைத்தால் என்னென்ன நிபந்தனைகள் வைக்கும் என்பது போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}